Sunday, January 30, 2011

எதற்காக "பிலாக்"கில் எழுத வேண்டும்?


இந்த 'தனி வலை' அல்லது "பிலாக்கில்" ஏன் எழுத வேண்டும் என 
யோசித்தால் சிறு வயதில் 'கணக்கு நோட்டின் கடைசி பக்கத்தில்" 
எழுதிப்பார்த்த 'வெண்பாக்களின்'  அல்லது கட்டுரைகளின் - ஆசைத்தொடர்ச்சி போல் தெரிகிறது.  கிட்டத்தட்ட ஆரம்ப எழித்தாளர்கள் அனைவரும் முயன்று பார்த்த "கையெழுத்து பத்திரிகை" போல.    நானும் எழுதுவேன் என கிணற்றுக்குள்ளிருந்த்து கத்தும் முயற்சியோ என்னவோ?    "சுஜாதா" சொன்னது 
போல 15 நிமிட புகழுக்கு ஆசையா? அல்லது தன்னைப் பிரகடனப் படுத்திக்கொள்ளும் ஆசையா?   வடிக்கட்டிப் பார்த்தால் தோன்றியதை 
யோக்யமாக எழுதிவைக்க ஒரு இடம்..என்னைப்பொருத்தவரை அவ்வளவுதான்.


======================================================


கடந்த ஒரு மாதமாக BSNL -ல் "தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான"   பிரச்சாரங்கள் 
ஒரு திருவிழாபோல நடந்து முடிந்தது.  எது வெல்லப் போகிறது என்பது 03/02/2011 
அன்று தெரியும். போட்டியிடும் இரு முக்கியமான சங்கங்களும் ஓரளவு 'இடது' 
சிந்தனை உள்ளவர்கள் தாம்.  "உலகத் தொழிலாளர்களை" ஒன்று படச் 
சொல்லிவிட்டு 'உள்ளூர் தொழிலாளர்களுக்காக' தேர்தல் நடத்துகிறார்கள். 


BSNL- ன் மார்க்கெட் அதல பாதாளத்தை நோக்கி!    நிதி நிலை படு மோசம்.
வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு இரண்டு லட்சம் பேருக்கு சம்பளம் 
கொடுக்கவேண்டும்!  கருவிகள் வாங்க வேண்டும் ! ஊதாரி செலவுகள் 
செய்யவேண்டும்!  நேர்மைக்கு புறம்பான வழியில் சம்பாதிக்க முயற்சிகள் தனி! 
அரசாங்கமே தன்னுடைய நிறுவனத்திற்கு எதிராக செயல்படும் வினோதம்! 
எதைப்பற்றியும் கவலை கொள்ளாது - காலத்தை ஓட்டும் -  பொறுப்பற்ற நிர்வாகம்! 
மேல் முதல் கீழ் வரை பணிக்கலாசரம் மறந்த நிலை! 
வேடிக்கை என்னவென்றால்   BSNL  காக்கப்பட வேண்டும் என "அனவரும்"
 "கோட்-சூட்" போட்டுக்கொண்டோ.."ஜோல்னா பை"  போட்டுக்கொண்டோ விடாது 
உபதேசிக்கின்றனர்.


இருவரது பிரச்சாரங்களை கவனித்தால் ....


"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் கான்பது அறிவு" என்ற குறளில்...
"அறிவு"  என்பதினை "அரிது"  எனப்படித்தால் சரி எனத் தோன்றுகிறது. 


ம்ம்ம்ம்ம்..........................................
=========================================================

Wednesday, January 26, 2011

போட்டாலும் தெரியல..போடாட்டியும் தெரியல...

சிறு வயதில் மூக்குக் கண்ணாடி மீது ஒரு கிரேஸ். இதை அணிந்தால் "ஒரு அறிவு ஜீவித்தனமான லுக்"  வந்துவிடும் என விரும்பியிருக் கிறேன்.  வயது தேயத் தேய இந்த "எக்ஸ்டிரா அட்டேச்மெண்ட்"  தரும் உபாதைகள்  மறந்து எங்கேயாவது வைத்துவிடுவது, உடைந்துபோவது 
என பல விதமானவை.  "தினமும் இதே வேலயாப்போச்சு" என்ற "இன் சொல்லுடன்"  மனைவி தேடிக்கொடுப்பதும் பழகி விட்டது.


மூன்று மாதமாக கண்ணாடி போட்டால் அருகில் இருப்பதும்போடா விட்டால் தொலைவில் இருப்பதும் தெரியாமல் போக, அருகில் உள்ள கண் மருத்துவமனைக்குச்  சென்றேன்.  பழைய கார்டுகள்  (முன்பே அங்கு வந்து சென்றவர்கள்)  பகுதிக்குச் சென்று பதிவு செய்துவிட்டு காத்திருக்க, 
 சற்று நேரத்தில் எனது "கேஸ் ரெகார்டுடன்"  இங்கு 
"பாலாராமன் யார் சார்" மலையாள வாசனையுடன் விளிக்கப்பட்டேன்.  


இந்த ஆஸ்பத்திரியில் "42-கிலோவிற்கு" மேல் போனால் வேலை கிடையாது என்பது போல்,  அனைத்து நர்ஸ்களும் ஈர்க்குச்சி-ஈர்குச்சியாய், பெரும்பகுதி மலையாள உச்சரிப்புடன் உலவுகின்றனர்.


லென்ஸ்களை மாற்றி மாற்றி போட்டுக்காட்டி எது பரவாயில்லை என்று கேட்க, ஒரு கட்டத்தில் எது நன்றாக தெரிகிறது அல்லது இல்லை என குழம்பிப்போனேன். இந்த ஆளுக்கு "டைலேஷன் தான் சரிப்படும்" என தீர்மானித்து,  பாப்பாவை அகலப்படுத்தும் சொட்டு மருந்து போட்டு கண்மூடியிருக்கச் சொன்னார்கள். கண் திறந்தால் அடுத்த  மூன்று மணி 
நேரத்திற்கு உலகமே பிரகாசம்.


ஒருவழியாக எனக்கு வேண்டிய "பவர்" என்ன என்று தீர்மானிக்கப்பட்டு,  
இரண்டு மணி நேரம் காத்திருந்து "கம்ப்யூட்டருக்கு" ஒரு கண்ணாடியும் மற்ற நேரத்திற்கு ஒன்றுமாக இரண்டு பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.


"நடந்தது என்ன..?" என்று விவரித்து விட்டு,  சாப்பாடு போடுவாயா என பிராட்டியாரிடம் வினவ,  "அதெல்லாம் சரி...எங்கே கண்ணாடி?"


ஆஹா...  "ரிசப்ஷன்"  டேபிளிலேயே அவற்றை மறந்து வைத்து விட்டு வந்தது நினவுக்கு வர...மீண்டும் ஆஸ்பத்திரிக்குப் போய்..........



குடியரசு தினத்தன்று செய்தித்தாளில் சில செய்திகள்

  • வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கறுப்புப் பண  விவரங்களை வெளியிடமுடியாது -மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டம் .
  • காஷ்மீரத்தில் "நமது நாட்டு" தேசியக் கொடியேற்றச் சென்ற தலைவர்கள் கைது. (திருப்பூர் குமரன் எதற்காக, யாரால் அடித்துக் கொல்லப்பட்டார்?) 
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த உதவி கலெக்டர் உயிரோடு எரிப்பு.
  • உத்திரப்பிரதேசத்தில் 2008-ல் அநியாயமாகக்  கொலை செய்யப்பட்டுக்கிடந்தாள் சிறுமி ஆருஷி . போதிய ஆதாரங்கள் இல்லையென வழக்கை முடித்துக் கொள்வதாக கூறியது சி.பி.ஐ.  அச்சிறுமியின் தந்தை புதியதாக விசாரணை வேண்டும் என மனு தாக்கல் செய்ய வந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். 

Tuesday, January 18, 2011

சபரி மலை சோகம்


நம் நாட்டில் 100 அல்லது 200 பேர் சாவது என்பது பெரிய
 விஷயமில்லை போலிருக்கிறது. நாம் மறத்துப்
போய்விட்டோமா
அல்லது 120 கோடியில் 
கொஞ்சம் 

போனால் என்ன என்று நினைக்கிறோமா அல்லது நாம் 

சாகாதவரை பரவாயில்லை என் சொரிந்துகொண்டு
போகத்துணிந்து விட்டோமா... ஒன்றும் புரியவில்லை..




பல இலட்சம் பேர் - ஒரே நாளில் - ஒரே நேரத்தில் கூடும் 
சபரிமலையில் எந்த நேரத்திலும் - எந்த இடத்திலும் 
இம்மாதிரியான விபத்துக்கள் நிகழக்கூடும் என்பதினை 
கணிக்க முற்றிலுமாக தவறிவிட்டோம்.

மின் வசதி உட்பட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் 
இல்லாத "புல்மேடு" பகுதியில் லட்சக்கணக்கில் மக்கள் 
குவிய எப்படி அனுமதித்தார்கள்?  4  போலீஸ்காரர்கள்
 போதுமென்றா?  ஒரு மந்திரியோ ஒரு வி.ஐ.பி யோ 
வருவதாக இருந்தால் இப்படித்தான் 4 காவலர்களோடு 
நிறுத்தியிருப்பார்களா?  பல லட்சம்பேர் கூடிய இடத்தில்
இப்படி  ஒரு "மேம்போக்கான" ஏற்பாடா?

வருடா வருடம் கூட்டம் கூடிக்கொண்டே போவதையும் 
அதற்கேற்றாற் போல பாதுகாப்பு  ஏற்பாடுகள் வேண்டும் 
என்பதினையும் யூகிக்கவே  இல்லையா?  
 அரவனை தயார் செய்து "துட்டு" பார்த்தால் போதும் என 
நினைத்தார்களா?

ஒரு ஆபத்து நிகழும்போது - தற்குறித்தனமாக-
 பித்து பிடித்தாற்போல நடந்து கொள்ளும்  நமது 
மக்களின் மனோபவாம் பற்றி ஏதேனும் அறிவார்களா?

சபரிமலை பற்றி தேவஸ்தானக்கமிட்டி தீர்மாணிக்க
 வேண்டிய வேளை வந்து விட்டது. கீழ்க்கண்ட வற்றில் 
ஏதாவது நடந்தால்   எதிர்காலத்திலாவது இம்மாதிரியன
 துயரங்கள் நடவாமல் தடுக்கலாம்.

(1) ஒரு மலைப்பிரதேசத்தில் - ஒரு அளவுக்குமேல் கூட்டம் 
சேர முடியாது   என்பதினை தேவஸம் போர்டு உணர வேண்டும்.
  ஆண்டு முழுவதும் -   வேண்டுமானால் ஒரு சில நாட்கள் 
   நீங்கலாக - சன்னிதானம்   திறந்திருக்க  வேண்டும்.
   Highly Orthodox தந்திரிகள் இக்கால்      தேவைகளையும் -  
   கூட்டத்தினையும் உணர்ந்து ஆட்சேபிக்காமல் - 
    கொஞ்சம் practical ஆக இருக்க   வேண்டும்.

(2)  சீஸன் தரிசனத்திற்கு - முன்னதாகவே பதிவு செய்யதல் 
      கட்டாயமாக்கப் பட வேண்டும்.  குறிப்பிட்ட அளவுக்குமேல்    
      அனுமதியில்லை என கண்டிப்பாக   சொல்லியாக வேண்டும் - 
      குறிப்பாக மகர ஜோதிக்கு!.

 (3)  ISRO - உபயக்கரம் நீட்டியதை பிடித்துக்கொண்டு 
       சன்னிதானத்திற்கு   செல்லவும்- திரும்பவும் மாற்று வழிகளை    
      ஆராய வேண்டும்.

(4)   மலையில் எந்தவொரு இடத்திலும் கூட்டம் சேர 
       அனுமதிக்காமல்        தரிசனம்  ஆனவுடன் "ஆச்சு ....போதும்" 
        என    கீழே அனுப்பிவிட    வேண்டும். இதற்கு   போதுமான 
        காவலர்களை - பக்கத்து    மாநிலத்திலிருந்தாவது கேட்டுப் 
         பெறவேண்டும்.

     ஏதாவது செய்வார்களா...இல்லை அடுத்து ஏதாவது நிகழும் 
    வரை  காத்திருப்பார்களா?


Adharsh Building:

I don’t find any rationality behind the orders of Ministry of Environment to demolish the structure.  Either the dubious allotments may be cancelled or the structure may be acquired by government and used for any useful purpose or the flats may be allotted only to the KARGIL victims by sending out the influential occupants. 

Whether the crores of public money spent for this construction was taken into account before arriving this decision?   It is unbelievable such a massive structure is completed – without the hands of corrupt personnel and bureaucrats, who are trying to exploit the cause of Kargil war widows?

I doubt this “decision” to demolish the structure is an usual ‘GIMMIC’ of our politicians.  One may presume that the demolition will never be carried out and building will stand as an insult to war victims

Saturday, January 15, 2011

திருப்பதி சென்று வந்தேன்.

நண்பர் திரு. செந்தில்குமாரும் நானும்,  என்று சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும் என ஊரெல்லாம் விசாரித்து "போகி-பொங்கல்" அன்று சென்றால் "சுலப தரிசனம்" பெறலாம் என தீர்மானித்து போகி அன்று திருப்பதி சென்றோம்.


ரூபாய் 50 முதல் வெங்கடாசலபதி தரிசன டிக்கட்டுகள் துவங்க - நாங்கள் எங்களுக்கு கட்டுப்படியாகும் ரூ.300/-த்  தேர்ந்தெடுத்து 'கியூ' வரிசையில் நின்றோம்.  டிக்கட் கௌண்டர்களும் - தரிசன காத்திருப்பு இடங்களும் ஆடு - மாடுகள் அடைக்கப்படும் பட்டிகளை நினைவூட்ட - நாங்களும் அவைகள் போலவே விரட்டப்பட்டோம்.  


நமது மக்களனைவரும் போகியன்று  குப்பைகளை கொளுத்தி காற்றை மாசுபடுத்துவதிலுமோ  - "இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் ஆயிரமாவது முறையாக" தமன்னாவை தரிசித்து பொங்கல் கொண்டாடுவதிலிமோ 'பிஸி'யாகியிருப்பார்கள்"  என நினத்தது தவறோ என்பது போல எங்கெங்கு காணிணும் மனிதத் தலைகள்.


சன்னிதானம் நெருங்க-நெருங்க பக்தர்கள் 'மாக்களாகவே" நடத்தப்பட்டனர் -  நடந்தும் கொண்டனர்.  பெருங்கூட்டத்தினால் செலுத்தப்பட்டும், பிழியப்பட்டும் கண  நேர தரிசனம் பெற்றோம்.


"இல்லை சார்..இன்று கூட்டம் மிகவும் கம்மி,    மற்ற நாட்களில் இதப்போல ஆயிரம் மடங்கு" என கலவரப்படுத்தினார் - திருப்பதிக்கு சீசன் டிக்கட் வைத்திருக்கும் ஒருவர்.


தேவஸ்தானத்திற்கு மனிதாபினமே இல்லையா?  வருபவர்களை பக்தர்களைப் போலன்றி கால் நடைகளைப் போல ஏன் நடத்த வேண்டும்? கொஞ்சம் கௌரவமாக தரிசனம் செய்யவிடலாமே என்ற சலிப்புடனும் - எரிச்சலுடனும் எனது மனைவியை ஓரிடத்தில் அமர்த்திவிட்டு - பெருமாளைப்போலவே பிரசித்தம் பெறற் 'லட்டு" வாங்கச் சென்றோம்.  அப்போது இரவு மணி ஒன்பது. 


லட்டு கவுண்டரிலிருந்து திரும்பும்போது "அங்கிள்,   உங்க ஆண்ட்டி மயக்கமடைந்து, நினைவில்லாமல் கீழே விழுந்து கிடக்கிறார் "   என எதிர் கொண்டு அழைத்தனர், செந்தில் குழந்தைகள்.  எனது மனைவியைத்தான்  சொல்கிறார்கள் .  35 வருட மண வாழ்க்கை மின்னல் போல் வந்து மறைந்தது.  


எனக்கு முன்னால் பாய்ந்து ஒடினார் செந்தில். இம்மாதிரியான இக்கட்டான நேரத்தில் எல்லாம் உடன் இருக்க வேண்டிய சாபம் அவருக்கு! வரம் எனக்கு.


அங்கேயிருந்த 'செக்கியூரிடிகள்" 108 -க்கு போன் செய்ய அடுத்த வினாடி வந்தது தேவஸ்தான 'ஆம்புலன்ஸ்'.  அதற்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் நடந்தவை யாவும் நம்ப இயலாதவை.  'எமெர்ஜென்ஸி' யில் இருந்த டாக்டர் செய்த முதலுதவிகள் - அக்கறையுடன் கூடிய சிகிச்சைகள். அடுத்து அவர் 'ரெஃபெர்' செய்த அப்போலோ 'கார்டியாலஜிஸ்ட்டின் ' ட்ரீட்மெண்ட். அந்த மாதிரியான நேரத்தில் இருக்க வேண்டிய வேகம்- தீர்மானம்- மனித நேயம்-  நம்பிக்கையளித்தல்- உடன்  வந்தவர்களுக்கு "பேஷன்டின் கண்டிஷன்" பற்றி எடுத்டுரைத்த பாங்கு... "மேல் நாடுகளில் மட்டுமே சாத்தியம் " என்று நினத்துக் கொண்டிருந்த யாவும் நனவாயிற்று. ஒரு இக்கட்டான நிலையிலிருந்து மனைவியை மீட்டுக்கொடுத்தனர்.   "திருமலை திருப்பதி தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனைக்கும் பணியிலிருந்த அனைவருக்கும்"  உடனுறை செந்திலுக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள்' 


பட்டிகளில் அடைக்கப்பட்டும் விரட்டப்பட்டும் பெற்ற தரிசனத்தினையும் - மருத்துவ மனையில் கிடைத்த முதல்தர அனுபவமும் முரண்படாக தோன்றின.   யோசித்ததில் கோளாறு தேவஸ்தானதில் அல்ல!!   நம்மிடையேதான்.


இதைவிட வேறுவிதமாக கூட்டத்தினை தேவஸ்தானத்தினரால் "மேனேஜ்' செய்யவே முடியாது என்கிற அளவில் பக்தர்கள் கோடிக் கணக்கில்.    சுய கட்டுப்பாடே இல்லாத இந்த கூட்டத்தினை கட்டுக்குள் கொண்டுவருவது வேறு எங்ஙனம்? 




"தீக்குள் விரலை வைத்தாலும் - உணர வேண்டிய " அனுபவத்தினை "திருமலையில் மட்டுமே உணர முற்பட்டதால்"  வந்த வினை!.  


வாழ் நாளில் ஒருமுறை வந்தால் மட்டுமே போதும் - "ஜென்ம சாபல்யம்" கிடைத்துவிடும் என்கிற  லிஸ்டில் அவசரமாக சேர்க்கப்பட வேண்டிய ஊர்களில் சில - திருப்பதி - சபரிமலை - காசி.

Thursday, January 13, 2011

BSNL என்ன ஆகும்?

ஆரூடமோ அல்லது ஜோஸியமோ சொல்வதாக உத்தேசமெதுவுமில்லை. BSNL வீழ்ச்சி நாடறிந்த ஒன்று.  இதற்கு TRAI மற்றும் அரசியலை குறை சொல்வது உண்மையாகவும் கொஞ்சம் சௌகரியமாககூட இருக்கிறது.  அதையும் மீறி அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாதா? வீழ்ச்சிக்கு அவர்கள் எந்த வகையிலும் காரணமில்லையா?  - தனியார்களின் போட்டியில் கானாமல் போகப்போகிறார்களா?  "வண்ண - கண்ணாடி" யேதும் அனியாமல் பார்தால் செய்யக்கூடியவற்றை கூட செய்யவில்லை என்பது புரியலாம். 


ஒரு வருடம் முன்பே அரசு 3ஜி-க்கு அனுமதி அளித்து விட்டது - வேறு போட்டியே இல்லாமலிருந்த அந்த சந்தர்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக்  கொண்டார்களா?


எதிர்காலம் பிராட் பேண்ட்-ல் இருக்கிறது எனத்தெரிந்தும் என்ன திட்டமிட்டோம்? உதாரணத்திற்கு நெய்வேலியிலும் - அண்ணாமலை நகரிலும் - புதுப்பாளயத்திலும்
நம்மால் கேட்டவுடன் இணைப்பு தந்தோமா? மோடமும் -மற்ற கருவிகளும் முன்னதாகவே வாங்க ஏன் திட்டமிடவில்லை? அப்படி திட்டமிட்டு கேட்டவர்களுக்கு மேலிடத்தில் கருவிகள் கொடுத்தார்களா?  எது POTANTIAL AREA  என்பது கண்டறியப்பட முடியாத இரகசியமா? இந்த இலட்சணத்தில் பிராட் பேண்ட் வேணுமா வென நிமிஷத்துக்கு ஒரு SMS. 


புது கருவிகள் வாங்க "டெண்டர்" போட்டதில் எத்தனை குளறுபடிகள்?


ஏகச் சக்ரவர்த்தியாக கோலோச்சிக்கொண்டிருந்த காலம் மலை ஏறிவிட்டது என்பதினை நிஜமாகவே புரிந்து கொண்டார்களா? 


பழுது வந்தால் நீக்குவதற்கு எத்தனை மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்? பழுது நீக்க தேவையான இன்ன பிற SPARES கைவசம் உண்டா?  குறைந்த பட்சம் புது கனைக்ஷன் கேட்டவர்களுக்கு INSTRUMENT உண்டா?


அவர்களுக்கு சற்றும் பழக்கமில்லாத - அனுபவமில்லாத - ஒரு கழுதத்றுக்கும் போட்டியினை (Cut throat competition) சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையாவது உணர்கிறார்களா?  துரதிர்ஷ்டம் என்னவென்றால் BSNL மேனேஜர்களும் தொழிலாளர்களும் போட்டிக்கு தயாராக இல்லை என்பது மட்டுமில்லை. படு மட்டமாடன "சிவப்பு நடா" முறைக்குத்தான் இவர்கள் பழக்கப்பட்டவர்கள் என்பது உண்மயா?   எந்த பிரச்சினைக்கும் "கைகாட்டி"  வேலைதான் நடக்கிறதா?


எத்தனை "விதுரர்கள்" வயிற்றுக்கு BSNL"-  மனதிற்கு "தனியார்" என  வைத்திருக்கிறார்கள்?  RETIRE -ஆன மறுதினம் தனியாரிடதில் வேலைக்கு சேர்ந்த உய ரதிகாரிகள்" எத்தனை பேர்? இவர்கள் பணியிலிருக்கும்பொது என்னவெல்லாம் தனியா ருக்கு சாதகமாக "தில்லுமுல்லு" செய்திருப்பார்கள்? 


எரியும் வீட்டில் பிடுங்கியது வரை லாபமென "எல்லா வகையிலும் "  "திருடுபவர்கள்" எத்தனை நபர்கள்? 


மேலேயிருந்து கீழ்வரை எத்தனை பேர் பத்து மணிக்கு பணிக்கு வருகின்றனர்?  கூடுமான வரையாவது கஸ்ட்டமர்களுக்கு உதவி செய்வோம் என்கிறர்களா அல்லது அங்கேபோ- இங்கெபோ என விரட்டுகிறர்களா?  ITI -போல ஆக தயாரகிவிட்டார்களா? 


ஒருவருக்கொருவர் அடித்துகொள்வதை கொஞ்சகாலம் விட்டுவிட்டு ஊழலுக்கும் - ஊதாரித் தனத்திற்கும் -  - வேலை செய்யாதவர்களுக்கும் எதிராக போரா டுவார்களா? 


சேவை மேம்பட்டுக்காக நம்மால் முடியக்கூடிய திட்டங்களை தயாரித்து அதனை நடைமுறைப்  படுத்துவர்களா?


இல்லை சம்பளமே தரமுடியாத நிலை வந்தால்தான் புரிந்து கொள்வார்களா?....


BSNL என்ன ஆகும்?

Monday, January 10, 2011

Fact or Myth?

Different Phases of a man:
After engagement: Superman
After Marriage: Gentleman
After 10 years: Watchman
After 20 years: Doberman
------------ --------- --------- --------- --------- ---------

There is only one perfect child in the world and every
Mother has it.
There is only one perfect wife in the world and every
Neighbour has it
------------ --------- --------- --------- --------- ---------

Prospective husband: Do you have a book called "Man,
The Master of Women"?
Sales girl: The fiction department is on the other side, sir.




------------ --------- --------- --------- --------- ---------

The world's thinnest book has only one word written in
it: "Everything" ;
and the book is titled: "What Women Want!"

------------ --------- --------- --------- --------- ---------

A man who surrenders when he's WRONG, is HONEST.
A man who surrenders when he's NOT SURE, is WISE.
A man who surrenders when he's RIGHT, is a HUSBAND


------------ --------- --------- --------- --------- ---------


Girlfriends are like chocolates, taste good anytime.
Lovers are like PIZZAS, Hot and spicy, eaten frequently.
Husbands are like Dal RICE, eaten when there`s no choice.


------------ --------- --------- --------- --------- ---------

Man receives telegram: Wife dead - should be buried or
Cremated?
Man: Don't take any chances. Burn the body and bury the ash.


------------ --------- --------- --------- --------- ---------


Q: Why dogs don't marry?
A: Because they are already leading a dog's life!


------------ --------- --------- --------- --------- ---------


Fact of life: One woman brings you into this world crying &
The other ensures you continue to do so for the rest of your Life!


------------ --------- --------- --------- --------- ---------


Q: Why doesn't law permit a man to marry a second
Woman?
A: Because as per law you cannot be punished twice for the
same offence .

------------ --------- --------- --------- --------- ---------

Man: I want a divorce. My wife hasn't spoken to me in six
months.
Lawyer: Better think it over. Wives like that are hard to get!

------------ --------- --------- --------- --------- -------


The bride, upon her engagement, went to her mother & said,
"I've found a man just like father!"
Mother replied, "So what do you want from me, sympathy?"


------------ --------- --------- --------- ---------

Saturday, January 8, 2011

CELL PHONE

தமிழன் என்று ஒரு இனமுண்டு ...தனியே அவருக்கு என்று ஒரு "செல்" உண்டு!!!

1 "டமால் டுமால் - தகர டப்பா" என்று விபரீதமா "ரிங்" டோண் வைத்துகொள்வார். அதையும் உச்ச ஸ்தாயியில் அலற விடுவார்.

2. தினம் ஒருதடவை - முடிந்தால் ஒரு காலுக்கு ஒரு தடவை ரிங் டோன் மாற்றுவார்.

3. கல்யாண வீடு அல்லது கருமாதி வீடு அல்லது மீட்டிங் - எதைப்பற்றியும் கவலை இல்லாமல் பெருங்குரலெடுத்து உரையாடுவார் . மெதுவாக பேசினாலும் அடுத்த முனையில் இருப்பவனுக்கு காதில் விழும் என்பதெல்லாம் இவருக்கு தெரியாது. . பேருந்தில் இவர் பக்கதில் 
உட்கார்ந்தவன் தீர்ந்தான்.

4. அடுத்த முனையில் இருப்பவன் காதில் இரத்தம் வரும் வரையிலோ அல்லது அவுட் ஆஃப் கவரேஜ் வரும் வரையிலோ விடமாட்டார்.

5 இரண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவையாவது யாரிடமாவது பேசாவிட்டால் - அய்யாவுக்கு தலையில் பிராண்டல் ஆரம்பமாகிவிடும்.

6 சில விந்தை ஆசாமிகள்  அந்த முனயில் இருப்பவர் கட் பண்ணி விட்டால் கூட இவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருப்பார். கொஞ்சம் ஃபிலிம் காட்டுவார்.

7 ரோடில் சைக்கிள் பெல்  அடித்தால் கூட தனது செல் ஃபோனை தொட்டுப் பார்த்துக்கொள்வார்.

8 ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது செல் ஃபோனை மாற்ற வேண்டும். அதுவும் இரண்டு சிம் மாடலாக இருந்தால் ரொம்ப நல்லது.

9. குறைந்த பட்சமாக  நாலு "சிம்" மாவது ஸ்டாக் வைத்து இருப்பார்.

10. "மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி" முழுசுமா வந்து விட்டால் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறாரோ - தெரியாது.

Friday, January 7, 2011

American Airports and Security


                                                              Ever Embarrassed in Airport?

Clearly Unclear

வழி தெரியாதவன்:


 சார்! அந்த ஊருக்கு எந்த வழியாக போவது? குழப்பமா இருக்கு!


வழி சொல்பவன் :


அப்படியா! 
மேக்காகவும் போவலாம்.
தெக்காகவும் பொவலாம். 
வடக்காகூட போவலாம். 
கிழக்கா போனா தப்பில்லே 
எங்கேயும் போவம கூட இருக்கலம்.
இல்லே பள்ளம் நோண்டி படுத்துக்கலாம்.
என்ன? தெளிவா புரிஞ்சுகினியா?


வழி தெரியாதவன்:
 நல்லா புரிஞ்சுது சார். உங்க பேர் என்ன ஸ்ரீ கிருஷ்னாவா சார்.

Thursday, January 6, 2011

Election Fever

அடுத்த மாதம்  ஒன்னாம் தேதி BSNL தொழிலாளர் தேர்தல் வருகிறது. இப்பவே ஆளுயர பேனர் - கொடிகள் வந்தாச்சு. CTO ல ரெண்டு பானேர் வச்சுருக்காங்க பாருங்க ... அம்மாடி.  எதுக்காக இவ்வ்ளளவு பெருசு? இன்னொரு  யூனியன் இருக்கே? அவங்களுக்கு கொஞ்சம் எடம் வேணாமா? எனக்கு ஜமால் நினைப்பு வருகிறது! அவர் ரகுவிடம் கேட்டார்.  என்னடா நீ எங்கே கொட்டகை போடப்போறே? நீ தள்ளி போடுறியா இல்லே நான் தள்ளி போடட்டுமா? ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு நிலா காலம்.  அந்த மனித நேயம் ..பெருந்தன்மை ..எல்லாம் காணாம போச்சு.. ஒரு சந்தேகம் ...மெம்பர்களே யோசனை பண்ணி ஒட்டு போட முடியாதா? விளம்பரம் வேணுமா? இன்னொரு திருமங்கலம் வராமலிருந்தால் சரி.