Sunday, April 24, 2011


ஸ்ரீ சத்ய சாய்பாபா இன்று மறைந்தார்.  

தன்னுடைய காலத்தில் கோடானு கோடி மக்களின் அன்புக்கும்,  பக்திக் கும் பாத்திரமாக இருந்திருக்கிறார்.  பல்லாயிரக்கணக்கானவர்கள்  
சாய்பாபாவை 'குரு' வாக பாவித்துக் கொண்டுள்ளனர்.  ஆன்மீகத் தலைவர், சமூக சேவகர். 

சாதாரணர்கள் ஆரம்பித்து பல்வேறு துறை பிரபலங் கள் வரை பலரது அன்பினைப் பெற்றவர்.

வறண்ட 'புட்டப்பர்த்தி' என்னும் கிராமத்தை உலகறியச் செயதவர். 
பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு மருத்துவ மனைகள், குடி நீர்த்திட்டங்கள், கல்விக் கூடங்கள், பொது சுகாதாரம், விளயாட்டு என
பல துறைகளுக்கும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பல உதவிகளை 
செய்தவர்.  அவருடைய போதனைகள் பலவும் உண்மை, அமைதி, அன்பு, 
அகிம்சை,ஒழுக்கமான, அர்த்தமுள்ள வாழ்க்கை ஆகியவற்றை வலியுறுத்துவதாக இருந்தன.

ஊழல் செய்வதற்காகவே திட்டங்கள் போடும் அரசியல் வாதிகள் உலாவும் இக்காலத்தில் ஒரு "தனி நபர் நிறுவனமாக" ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியவர். சென்னையின் தாகத்தை தீர்க்கும் தெலுங்கு கங்கை திட்டத்திற்கு ஏராளமாக உதவி செய்தவர். 

அவருடைய நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய கருத்துக்கள் எவ் வாறாயினும் ஒழுக்க நெறிகளும், மற்றவர்களுக்கு உதவ நிணைக்கும் மனோபாவமும் அருகி வரும் இந்த நாட்களில் நல்லொழுக்கத்தை போதித்தவரும்,  இக்கருத்துக்கள் அதிக எண்ணிக்கையான மக்களிடையே செல்லும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவரும், சிறந்த சமூக சேவகருமான 'சத்த சாய் பாபா' வின் மறைவு சமீப காலங்களில் ஈடு செய்யமுடியாதது.

No comments:

Post a Comment