Wednesday, April 20, 2011

Justice delayed is justice denied


நினவிருக்கிறதா? சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி கொலை செய்யப்பட்டார்.  இவ்வழ‌க்‌கி‌‌ல் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு, March 11, 1998 அன்று கடலூர் கோர்ட்டில் இர‌ட்டை ஆ‌யு‌ள் 
த‌ண்டனை வழங்கப்பட்டது.  இவ்வுத்தரவினை ரத்து செய்தது செ‌ன்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌ம்.  இப்போது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உயர் நீதிமன்ற தீர்ப்பினை ர‌த்து செ‌ய்துள்ளது.


வழக்கை சரியாக விசாரிக்காமல் ஜான் டேவிட்டின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.


‌(செ‌ன்னை ப‌ல்கலை‌க்கழக மு‌ன்னா‌ள் துணைவே‌ந்த‌‌ர் பொ‌ன்னுசா‌மி‌‌யி‌ன் மக‌ன் நாவரசு. இவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசுவை, 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடினர். விசாரணையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஜான் டேவிட் என்ற மாணவர் தான் நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார். ஜான் டேவிட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சென்னை தாம்பரத்தில் ஒரு பஸ்சில் இருந்த சூட்கேசில் இருந்து நாவரசுவின் உடல் துண்டுகளை கைப்பற்றினர். இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது)

No comments:

Post a Comment