Monday, May 2, 2011

சாய்பாபாவும் சர்ச்சைகளும்!!

சாய்பாபா மறைந்தார்.  காத்திருக்கும் 'வலையாளர்களும்'  'முற்போக்கு' எழுத்தாளர்களும், மாய்ந்து மாய்ந்து எழுத ஆரம்பித்து விட்டனர்.

இந்த கட்டுரைகள் மூன்று விதமாக பிரிக்கலாம்

(1) சாய்பாபா பித்தலாட்டக்காரர். பொய்யுரைப்பவர்.  இவரது   சாம்ராஜ்ஜியம் பெரும்பாலும் பொய், பித்தலாட்டம் போன்றவைமூலம் கட்டட்பட்டது! இவரது அற்புதங்கள் - அதாவது விபூதி, குங்குமத்தைக் காற்றிலிருந்து வரவழைத்து சாதாரணர்களுக்கும்,  லிங்கம், மோதிரம், தங்கத்தால் ஆன சங்கிலி போன்ற சிறு சிறு பொருள்களை வரவழைத்து காவஸ்கர், தெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்கள்முதல் பல சினிமா, அரசியல் பிரபலங்களும் தருவதுதான். இனி இந்த ட்ரஸ்டின் சொத்துக்கள் 'அம்போ' தான்.

(2)  இல்லை..இல்லை இவர் ஷீரடி சாய்ப்பாபாவின் மறுபிறவி.  அவதார புருஷன். இவர் மூலம் பல வியாதிகள் குணமடைந்தன. பக்தர்கள் ஆசீர்வதிக்கப் பட்டார்கள்.

(3) எது எப்படியோ...மக்களுக்கு பல நல்ல திட்டன்கள் தீட்டினார்.  நிறைவேற்றினார். ஊழல் இல்லை. கூடுமானவரை நல்லுபதேசங்கள் 
செய்தார்.  கொஞ்சம் பேராவது 'நல்ல மனிதாராக' மாறுவதற்கு முயற்சித்தார் அல்லவா? அது போதும்!


முதல் விதம் மிகவும் மேலோட்டமானது.  போலி-பித்தலாட்டம், காசு சேர்ந்துவிட்டது என்று ஒலிக்கும்போதே அதில் மறைந்திருக்கும் பொருள் 
என்னவென்றால், ‘நான் ரொம்ப விவரமானவன், ஏமாளி இல்லை, இவங்ககிட்ட எல்லாம் ஏமாற மாட்டேன்’ என்பதே!.  
இவர்கள்து கண்கள் சாய்பாபாவின் டிரஸ்ட்டில் உள்ள பணம்.

இரண்டாவது - பக்தி சார்ந்தது. உணர்வு பூர்வமானது.  எனவே விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை.

மூன்றாவது சற்று யோசிக்க வேண்டியது.

பாபாவிடம் பணம் சேர்ந்தது! உண்மைதான்! அணால் அதை வீட்டிற்கா எடுத்துச் சென்றார்?

அ)  எல்லா ஆன்மீகத்தேடல்களுக்கும் அடிப்படையான அமைதி அவரிடம் கிடைத்தது. 

ஆ) ஒழுக்கம். இதை மிக முக்கியமாக போதித்தார். அவரது பக்தர்களில் மதமாற்றம் செய்பவர்களையோ, வெடி குண்டு வன்முறை யாளர் களையோ காணமுடியாது. கூத்தாடிகள் மற்றும் அரசியல்வாதிகள் பின்னால் செல்லும் கூட்டம் நடந்துகொள்ளும் விதம் நாடறிந்தது தானே!. 

இ). சக மனிதருக்கு உபகாரம் செய்வது இவரால் குழைந்தப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுக்கப் படுகிறது.   மருத்துவ வசதிகள் யாவற்றிலும் பாபாவின் பக்தர்கள் நேரடியாக ஈடுபடுத்தப் பட்டனர். 

ஈ). எம்மதமும் சம்மதம் என்பது அவரது மற்றுமொரு வழிகாட்டுதல். மதங்களை மறுக்கவில்லை.ஆனால் இயைந்து இணைந்துவாழ வழியுறுத்தினார்/வழிகாட்டினார்.

உ) வேதங்கள்/பகவத்கீதை/யோகா போன்ற பண்டைய இந்தியாவின் ஆன்மீக வழிகளையே தன் பக்தர்களுக்கு கொண்டுசேர்த்தார்.

ஊ)  பொதுமக்களுக்கு சுகாதாரம்,  இலவச மருத்துவம், பள்ளிகள்/
கல்லூரிகள், குடி நீர் வசதிகள் போன்றவற்றை செய்து தந்தார்.

சுருக்கமாகச் சொன்னால் அவர் வித்தைகள் செய்திருக்கலாம். ஆனால் 
அவரால் யாரும் எதையும் இழக்கவில்லை.  சிலர் ஏதாவது பெற்றிருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம்.  ஆன்மீகத்தின் மூலம் சில லட்சம் நல்ல குடிமகன்களை உருவாக்கினார்!

நான் இவர்பால் பக்தி கொண்டவரும் இல்லை! தூஷிப்பவனும் இல்லை.

எனது கேள்விகள் எல்லாம்:

அரசாங்கங்களும், அரசியல் வாதிகளும் தங்களுக்கு இடப்பட்ட
பணியினை / கடைமைகளை சரியாகச் செய்து விட்டால் "போலிச் 
சாமியார்களுக்கோ",  "நிஜச் சாமியார்கள்ளுக்கோ" தேவையிருக்காது தானே!

மருத்துவ வசதிகளும், குடி நீர்த்திட்டங்களுக்கும், கல்விக் கூடங்களுக்கும் அரசுகள் சாமியார்களை நாடுவது ஏன்? அவரிடமிருந்து இத்தகைய வசதிகளை பெறும்போதெல்லாம் இந்த 'முற்போக்கு வாதிகள்' என் மௌனியாக இருந்தார்கள்?


'அற்புதமமோ (அ) பித்தலாட்டமோ' சில ஆயிரம் பேராவது தங்களது சிந்தனையில் / செய்கையில் சாத்வீகத்தை கொண்டு வந்தாரா இல்லையா? 

இவர் யாரையாவது 'வெடிகுண்டு செய்யவைத்தாரா? இல்லை கோதுமையும் அரிசியும் கொடுத்து, பள்ளிக்கூடம் நடத்தி 'மத மாற்றம் 
செய்தாரா?

பாபாவின் விபூதியை கிண்டல்டிப்பவர்கள், கூட்டம் போட்டு முடவனை நடக்கவைக்கும் போதும், ஊமைகளை பேசவைக்கும் போதும் இந்த 'வினோத மதசார்பற்றவர்கள் எங்கே போயிருந்தார்கள்?

வெளி நாட்டிலிருந்து துப்பாக்கிகளும், வெடுகுண்டுகளும் கடத்தப் பட்டு இந்தியாவில் வெடிக்கச் செய்யும்போது ஒருவேளை 'ஆழ் நிலை' தியானத்திற்கு சென்று விட்டார்களோ? 

இந்து மத பெரியவர்கள் மறையும் போது மட்டும் நீட்டி முழக்கி கட்டுரை எழுதும் இந்த வினோத 'மத சார்பற்ற' கட்டுரையாளர்கள், பிற மதத்தவர் பற்றிய பேச்சு வந்தால் 'மௌன விரதம்' காக்கிறார்கள்.

சாய்பாபா அறக்கட்டளை சொத்துக்கள் பற்றி கூப்பாடு போடும் இந்த "போலி மத சார்பின்மை யாளர்கள்"  இதே அளவுகோலை 'மிஷனரிகளுக்கும்' பொருத்துவார்களா?

இந்தியாவில் 'மத சார்பின்மை என்பது' 'இந்துக்களை பழிப்பதிலும், இந்து மத தத்துவங்களை கொச்சைப்படுத்துவதிலும், இந்து மதத் தலைவர்ளின் மீது சேற்றை வாரி வீசுவதும் இந்து தெய்வங்களை அநாகரிகமாக சித்தரிப்பதில் மட்டும் தான்.

வாழ்க இந்திய மத சார்பின்மை!!



4 comments:

  1. true
    good post ,

    ReplyDelete
  2. i like ur blog until read this article. u too proved as an ordinary RSS like person....
    don't believe or worship which has been creating by god..
    saibaba was cheater...u can watch his cheating tricks in Youtube....don't emotion he has spent lot money to poor people...where he has got money..after his death lot of gold biscuits are found his underground room...what is the need this gold for such a saint...

    ReplyDelete
  3. Dear Shri Unmaiyalan.. It seems that you are in a hurry to brand me as an RSS member or supporter. I am an Atheist or at least a non-believer of rituals and saints (repeat saints and not guru). If you read between lines, you may understand that I am accusing the governments more.

    ReplyDelete