Sunday, July 10, 2011

தில்ஷன்

சென்னை இராணுவக் குடியிருப்புக்குள், பாதம் கொட்டை பறிக்க வந்த பதிமூன்று வயது சிறுவன் தில்ஷனை, கொலை செய்தது நான் தான் என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளார். . முன்பாக அவனை யாராவது ஒரு இராணுவ அதிகாரி தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று அனைவரும் சந்தேகப்பட்டனர். பிரேத பரிசோத னையில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிய வந்தது.


இந்த வழக்கை சிபி-சிஐடி விசாரித்து வந்தது. இந்நிலையில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ்(58) என்பவர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி தான் லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். விசாரணையில் தில்ஷனைக் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். தில்ஷனை சுட அவர் பயன்படுத்திய நீள துப்பாக்கி கூவம் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 


குணாம்ச ரீதியில்,ஆர்மி என்பது ஆர்மி ஆர்மிதான்.  அதற்கு இந்திய ஆர்மி, பாகிஸ்தான் ஆர்மி என்று எந்த வித்தியாசமும் கிடையாது.  புரூட்டலிஸம் அவர்கள் உடம்பில் ஊறியது. இல்லாவிடில் ஒரு 13 வயது சிறுவனை,  இந்திய சிறுவனை, சீன (அல்லது) பாகிஸ்த்தானியய சிறுவனை அல்ல, சுட்டுக் கொல்ல யாருக்கு அவ்வளவு தைரியம் வரும்? 


இலங்கையிலும், பாங்களா தேஷிலும் நடந்தேறிய கற்பழிப்புகள், வழிப்பறிகள் யாவரும் அறிந்தது தானே? அவர்களை, அவர்களது 'பாரக்குக்குள்'  வைத்திருக்க வேண்டியது அவசியம். மிக, மிக அவசியம் என்றாலொழிய அவர்கள் வெளியே வர விடக்கூடாது! அவர்கள் உதவியினையும் நாடக் கூடாது. சிவிலியன் களிடமிருந்து அவர்களை விலக்கியே வைப்பது தான், நாட்டிற்கும்-ஜன நாயகத்திற்கும் நல்லது.


அவர்கள், நாட்டின் சகலவிதமான உபாதைகளுக்கும் தங்களிடம் தீர்வு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.  அவர்கள் சொல்லும் தீர்வு பெரும்பாலும், 'துப்பாக்கி முனையில்' தான் இருக்கும். 


நல்ல வேளையாக நமது 'செயல்படும்' பிரதமர் பீகார் மாவோயிஸ்ட் பிரச்சினைக்கு தீர்வு கான 'ஆர்மி'யை வெளியே கூப்பிடவில்லை.  அப்படி ஏதாவது செய்து வைத்தி ருந்தாரானால், நிலைமை இன்னும் மோசமாகி, இன்னொரு 'காஷ்மீர'த்தினை உருவாக்கி வைத்திருப்பார்.  


சிவிலியன் களும், பாதுகாப்பு படையினரும் விலகியே இருப்பதுதான் உத்தமம்.  அவர்களுக்குத் தெரிந்த மொழி ஒன்றே ஒன்று தான். 'துப்பாக்கி!'

No comments:

Post a Comment