Sunday, August 7, 2011

ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க!!

CAG (தமிழில் தலைமை தணிக்கை அதிகாரி?) அவர்கள், காமன்வெல்த் விளையாட்டு செலவுகளைப்பற்றி, சில அட்சேபனைகளை தெரிவித்துள்ளார்.    அவர் சொல்லி யுள்ளது என்ன? காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, தில்லியை அழகு படுத்துவதற்காக ரூ.100 கோடியினை , வீண் செலவு செய்து விட்டனர், மற்றும் Excess Billing  என்பது தான். ஊழல் செய்து விட்டனர் என குறிப்பிடப் படவில்லை. (கல்மாடி விவகாரம் வேறு!) இதன் பொருள் என்ன வென்றால் இந்த 100 கோடிகளை வேறு பயனுள்ள வகையில் செலவழித்திருக்கலாம் என்பது தான். 


உடனே ஷீலா தீட்சித்தே ராஜினாமா செய் என கோஷம் எழுப்பி விட்டது BJP!.  கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு, காங்கிரஸ் பாடிய பாட்டிற்கு எதிர்பாட்டாம்! 


நாம் ஒன்றை புரிந்து கொள்வோம். CAG என்பது திட்டம் போடும் அமைப் பல்ல.  நாட்டிற்கு எது தேவை அல்லது தேவையில்லை என முடி வெடுக்கும் அமைப்பும் அல்ல.  கொடுக்கப்பட்ட தொகை சரியாக செலவழிக்கப்பட்டுள்ளதா (அ) வருமான இழப்பு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது கோளாறு உள்ளதா என கண்டுபிடிக்கும் அமைப்பு தான்.


CAG- சொல்லும் "இந்த வீண் செலவு" என்ற   Objection -ஐ,  இன்னும் கொஞ்சம் நீட்டித்தால், இவ்வளவு செலவழித்து செயற்கைக் கோள்கள் செலுத்த வேண்டாம். சந்திராயன் திட்டம் வேண்டாம். மெட்ரோ திட்டங்கள் வேண்டாம், புதிய விமான தளங்கள் வேண்டாம்.  சர்வ தேச தரத்தில் IIM கள் வேண்டாம்- என சொல்லிக் கொண்டே போகலாம்.   


ஆடிட்டர்களுடைய குணாம்சமே எல்லாவற்றையும் கேள்வி கேட்பது தான். அதே போல் காமன் வெல்த் கேம்ஸ் செலவினங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 


திட்டமிடுபவர்களுக்கும் கணக்குப் பிள்ளைகளுக்கும் எப்போதும் தகறாறு இருந்து கொண்டேதானிருக்கும். ஏனெனில் கணக்குப் பிள்ளைகளுக்கு ஏதும் "Vision" இருக்காது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் Voucher / Head of Account / Revenue Loss அவ்வளவு தான்.   தணிக்கையே வேண்டாம் என்று சொல்லவில்லை. CAG  அறிக்கை குறித்து ஒரு சரியான balanced  பார்வை இல்லை யென்றால், எல்லாமே சந்தேகத்துக்குரியதாகிவிடும். 


சரி! விஷயத்திற்கு வருவோம்.  நமது கேடுகெட்ட அரசியல் வாதிகளும் / ஊழலில் திளைக்கும்அதிகார வர்க்கத்தினரும் தில்லியை அழகு படுத்து வதற்காக ஒதுக்கப்பட்ட 100 கோடிகளையும், ஒரு பைசா கூட திருடாமல் செலவழித்திருப்பார்கள் என சொல்லமுடியாது தான். ஆனால் அப்படி ஒரு  திட்டமே இல்லாவிட்டால், என்ன ஆகியிருக்கும்? மற்ற நகரங்களைப் போல நமது தலை நகரமும், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களின் பொது, அழுக்காக, ஒழுங்கற்ற தெருக்களுடன், பொல்லியூஷன் மிகுதியான பஸ்களுடன்,குப்பையும் கூளமுமாக காட்சி அளித்திருக்கும். நமது விருந்தினர்கள் மத்தியில், நமது தலை நகரத்தைப் பற்றிய Picture  எப்படி இருந்திருக்கும்?


வெளி நாட்களிலிருந்து வரும் விளையாட்டு வீரர்கள் (தமிழில் "Player" என்பது எப்படி 'வீரனாகி'விட்டது? ) மற்றும் டிப்ளமாட்கள் மத்தியில் நமது கௌரவம் என்ன ஆகியிருக்கும்? அப்படியிருப்பது நமது CAG க்கு சம்மதமா?


சரி.. இம்மாதிரி, காமன் வெல்த் விளயாட்டு போட்டிக்காக தில்லியை கொஞ்சம் அழகு படுத்தப் போகிறோம் என முன்பாகவே CAG-ஐ கேட் டிருந்தால் என்ன சொல்லியிருப்பார்? வேண்டாம் என்றா? இன்னும் கொஞ்சம் முன்னே போய் காமன் வெல்த் விளையாட்டு நடத்தலாமா என்று கேட்டிருந்தால் என்ன சொல்லியிருப்பார்? இந்த கேம் நடத்துவதால் 'ரிடர்ன்' ஒன்றும் இல்லை!  ஏகத்துக்கும் செலவாகும்! எனவே இந்த கேம் நடத்தவே அப்போது கூட வேண்டாம் என சொல்லியிருப்பாரா? மக்களப் பற்றி கவலைப்படும் CAG,  பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து என்ன சொல்கிறார்?  


இப்போது தெளிவாகிறதா 'திட்டமிடுபவருக்கு-கணக்குப் பிள்ளைக்கும் உள்ள வேறுபாடு?


CAG  - UPA சார்பாக அல்லது NDA சார்பாக இருக்கிறார் என்று சொல்ல வில்லை!


அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை தடுக்கும் உரிமை,  ஒரு கணக்குப் பிள்ளைக்கு இல்லை என்கிறேன். எல்லாவற்றையும் 'அரசியலாக்கிப் பார்ப்பது'  நமது தேசீய குணமாகிவிட்டது என்கிறேன். CAG-ன் ரிப்போர்ட் களும் இப்படி அரசியலாக்கப் படுகிறது.  திட்டமிடுபவர்களும் அதற்கான கணக்குகளை சரிபார்ப்பவர்களையும் வேறுபடுத்திப் பார்க்கும் அரசியல் 'முதிர்ச்சி' நம்மிடையே காணமல் போய்விட்டது தான் பரிதாபம்!



அரசியல் ரீதியான சண்டைகளை அரசியல் ரீதியாகத்தான் போராட வேண்டும். பிரச்சினை என்ன வென்றால் 'இந்தியாவில் ஒர் அரசியல் கட்சிக்கு மாற்றாக  இன்னொறு கட்சி இல்லை' என்பது தான்.  அவரவர் ஆட்சிக்கு வரும்போது அவரவர் கல்லா கட்டிக் கொள்வர்.  


நிங்கள் கணித்திருக்கக் கூடும் !  கொஞ்ச வருஷமாகவே நமது மக்கள் பிரதிநிதிகள், மக்களவையை நடத்த விடுவதில்லை. உருப்படியான விவாதங்கள் இல்லை. அட்டண்டென்ஸ் இல்லை. ஏதேனும் ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபடுவார்கள்.  விதி விலக்கு - கம்யூனிஸ்ட் கட்சிகள். சபை ஒத்தி வைக்கப் பட்டுக் கொண்டே இருக்கும். நாமும் டி.வி சீரியல் பார்ப்பது போல இவர்களது டிராமாக்களையும் பார்த்துக் கொண்டிருப்போம்.  இந்த முறை பாராளுமன்ற கூட்டத்தொடரினை முடக்குவதற்கு BJP -க்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது - CAG.  அவ்வளவு தான்!!



எனவேதான் மக்கள், நமது அரசியல் அமைப்புகளிடம் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.  தங்களை காப்பாற்ற யாராவது 'CAG', 'Court', 'அன்னா ஹசாரே' போன்று எவரேனும் கிடைக்க மாட்டார்களா என அல்லாடு கின்றனர்.  



இவர்கள் எவரும் ஒரு மாற்று வழிமுறையினை காட்டவே இயலாது.  "அரசியல்"  மூலம்தான்,  "அரசியல் மாற்றம்" வரும்.  பொது நலத் தொண்டர்கள் அல்லது ஆசனம் சொல்லித் தருபவர்கள் மூலம் அல்ல. இவர்களால் ஒரு ஆரம்ப "ஜெர்க்" கொடுக்க முடியும். அவ்வளவுதான். 




No comments:

Post a Comment