Sunday, August 21, 2011

ஜன் லோக் பால்


மத்திய அரசு சொல்லும் "லோக்பால் (LP)"  மசோதாவுக்கும்- அன்னா ஹசாரேயின் லோக்பால்(JLP) மசோதாவுக்கும் என்னதான் வித்தியாசம்? 

1. லோக்பாலின் அதிகார வரம்பு:


அரசு:  பதவியில் இருக்கும் பிரதமர், நீதித்துறையினர்,குரூப் 'A' அதி காரிகளுக்கு கீழே உள்ளவர்கள் லோக்பால் வரம்புக்குள் வரமாட்டார்கள் .


அன்னா:  பிரதமர், நீதித்துறையினர், அரசு அதிகாரிகள்/ஊழியர்கள் என அனைவரும் லோக்பால் பரிசீலனை வரம்பிற்குள் வரவேண்டும்


2. லோக்பால் குழு:


அரசு: லோக்பால் குழுவில் தலைவர் தவிர அதிக பட்சம் 8 பேர் இருப்பர். அதில் பாதிஉறுப்பினர்கள், நீதித்துறை பின்னனி உள்ளவர்களாக இருப்பர்.


அன்னா: தலைவரைத் தவிர 10 பேர் இருக்க வேண்டும். அதில் 4 பேர் நீதித் துறை பின்னனியாக இருக்க வேண்டும்.


3.  இந்த குழுவினைத் தேர்வு செய்வது எப்படி:


அரசு:  லோக்பால் உறுப்பினர்களை தெரிவு செய்யும் கமிட்டியில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இருவர், இரு உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், CAG மற்றும் சென்ற லோக்பால் கமிட்டியின் தலைவர்.


அன்னா: பத்து உறுப்பினர்களில் ஐவர், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் அல்லது, தலைமை தேர்தல் அதிகாரி அல்லது 'CAG'. மீதி உறுப்பினர்கள் பொதுமக்களிடமிருந்து.


4.  உறுப்பினருக்கு தகுதி:


அரசு: நீதித்துறையிலிருந்து வரும் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி யாகவோ அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ இருந் திருக்க வேண்டும். இது தவிர, ஊழல் எதிர்ப்பு கொள்கையிலோ,பொது நிர்வாகத்திலோ,vigilanace or finance -ல் 25 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


அன்னா: நீதித்துறையிலிருந்து வரும் உறுப்பினர்கள்10 வருடம் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது உச்ச நீதி மன்றத்தில் 15 வருடம் வக்கீலாக இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். 




5.  லோக்பால் உறுப்பினர் தகுதி நீக்கம்:


அரசு: குடியரசுத்தலைவர் தானாகவோ அல்லது 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொழுத்திட்டு கொடுத்தாலோ, அல்லது யவரேனும் குடிமக்கள் மனு கொடுத்து, அந்த மனுவின் பேரில் திருப்தி அடைந் தாலோ,  உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்பி, பின் பதிவி நீக்கம் செய்யலாம். 


அன்னா:  பொதுமக்களில் யார் வேண்டுமானாலும், சுப்ரீம் கோர்ட்டில் மனுகொடுத்து, அந்த மனுவில் உண்மை யிருக்குமானால், குடியரசுத் தலைவருக்கு, அந்த உறுப்பினர பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கலாம்.


6. எதைப்பற்றி விசாரிக்கலாம்:


அரசு: லஞ்ச தடுப்பு விதிகளின் கீழ் வரும் விஷயங்களை மட்டும் விசாரிக்கலாம்.


அன்னா: மேற்சொன்னதைத் தவிர, குற்றவியல் சட்டத்தினை மீறுப வர்கள், ஒழுங்கீனாமாக நடந்து கொள்பவர்கள், குடிமக்களின் உரிமை களை மீறுபவர்கள் என பலரும் இந்த மசோதாவின் கீழ் வருவார்கள். (Violation of Indian Penal Code, victimization of whistleblowers and repeated violation of citizen's charter). 


7. விசாரணை:


அரசு: லோக்பால் அமைப்பில், விசாரணைப் பிரிவு தனியாக இருக்கும்


அன்னா: CBI அமைப்பே, லோக்பால் கீழ் விசாரண நடத்தும். (CBI will be under the Lok Pal while investigating corruption cases)


8. விசாரணை அமைப்பு: 


அரசு: அரசாங்கமே லோக்பால் அமைப்பிற்கு prosecution wing அமைத்து தரும்.


அன்னா: The CBI's  prosecution wing will conduct this function.


9. வழக்கு: 


அரசு: சிறப்பு நீதிமன்றத்தில் லோக்பால் அமைப்பு வழக்கு தொடுக்கும். முன் அனுமதி தேவையில்லை.


அன்னா: பிரதம,மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உச்ச/உயர் நீதிமன்ற நீதிபதிகள்ர் உட்பட எவர் மீதும் லோக்பால் அமைப்பினரே 7-க் கும் மேற்பட்ட உறுப்பினரின் அனுமதியின் பேரில் வழக்கு தொடுக்கலாம்.


10. இதர:


அன்னா: ஊழல் குற்றச்சாட்டைத்தவிர, குடிமக்களின் குறைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கலாம்.


அரசு:  அப்படிப்பட்ட அதிகாரம் லோக்பாலுக்கு இல்லை.

No comments:

Post a Comment