Friday, September 9, 2011

இறக்கும் நிலையில் இந்திய தந்தி


இன்று அலுவலகப் பணி நிமித்தமாக தொலைவில் உள்ள ஒரு தந்தி அலுவலகத்திற்கு சென்று வர நேர்ந்தது. உள்ளே சென்றால் பொதுமக்கள் யவருமில்லை.  கவுண்டரின் (Counter) உள்ளே, ஒரே ஒருவர் இருந்தார்.  அவரும் கூட தந்தி சம்பந்தமான வேலை ஏதும் செய்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அலுவலகத்தில் அவருக்கு இடப்பட்ட வேறு ஏதோ ஒரு பணியினைச் செய்து கொண்டிருந்தார். 

டெலகிராஃபிஸ்ட் என அழைக்கபட்டுக் கொண்டிருந்த அந்த அலுவலக பணியாளர், ‘மோர்ஸ் கோட்' அடிப்பதில் பயிற்சி பெற்றவர். எதற்காக பணியில் சேர்க்கப்பட்டாரோ, எதில் பயிற்சி பெற்றாரோ அந்த களத்திலிருந்து வேருடன் பிடுங்கப் பட்டு, சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பணியினை மேற் கொண்டிருந்தார்.


நினைவுகளை கொஞ்சம் ‘ரிவைண்ட் செய்து பார்த்தேன். அது, தொலைதொடர்புத்துறையின் ‘கற்காலம்.  செய்தி தொடர்புகளுக்கு ‘தபால்–தந்தி இலாக்கா மட்டுமே பொறுப்பேற்றிருந்த நேரம். தற்போதைய  “தொலைதொடர்பு இலாக்கா கூட ‘தபால்-தந்தி இலாக்காவில்  அடக்கம். பின்னர் தான் "தபால் தந்தி" யிலிருந்து ‘தொலை தொடர்பு தனியாக பிரிந்தது. அக்காலத்தில் சாதாரனர்களுக்கான கம்யூனிகேஷஷேன் ‘தபால் தான். அவசரமென்றால் தந்தி.

‘சார்... போஸ்ட்.. என்ற சப்தம், அக்காலத்தில் பலருக்கும்  தேனாக இனித்த  குரல். சொந்த-பந்தங்களிடமிருந்தோ, அலுவலகத்திலிருந்து வரும் செய்திகளுக்காகவோ, காத்திருந்து, கடிதங்களைப் பெற்றுச் செல்வது வழக்கம்.  காலை பத்து மணிக்கு, அனேகமாக எல்லா வீடுகளிலும் கேட்கும் செற்றொடர். “போஸ்ட் மேன் வந்துவிட்டு போய்விட்டாரா?” 

‘சார்... போஸ்ட்..என்ற பிரயோகத்தை பயன்படுத்தாத எழுத்தாளர்களே இல்லை என்று துணிந்து சொல்லிவிடலாம். அவ்வளவு பிரபலமான, தவிர்க்க இயலாத, ஒரு நைந்து போன வார்த்தை இது. 

தபால் அலுவலகங்களில், பிரதான இடத்தை தந்தி அலுவலகம் பெற்றிருக்கும். தபால் அலுவலகம், மாலை ஐந்து மணிக்கு மூடப்பட்டு விட்டாலும், தந்தி அலுவலகம் திறந்தே இருக்கும். தந்தி அனுப்புவதற்காக எப்போதும் கூட்டம் காத்திருக்கும். போஸ்ட் ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு இரவில் ‘லேட் ஃபீஸ் பெற்றுக் கொண்டு பணியாற்றும் அலுவலகர் பலர் இருந்தனர். 

உடணடியாக செய்தி போய்ச் சேரவேண்டும் எனில், அக்காலத்தில் தந்திதான் வழி. தந்தி மணியார்டகள் கூட உண்டு.  கிராமப் புரங்களுக்கு தந்திகளை கொண்டு சேர்ப்பதற்காக, ‘மெஸஞ்சர்கள் எல்லாம் உண்டு. (இந்தியா விடுதலை ஆவதற்கு முன்னால் இவர்களுக்கு ‘ரன்னர்கள் என்று பெயர். இந்த ரன்னர்களை  சட்டப்படியாகவே எவரும் வழியில் தடுத்து நிறுத்தக் கூடாது.  சுடுவதற்கு கூட அதிகாரம் பெற்றவர்)

அக்காலத்திய தந்தி அலுவலகங்கள் நினவுக்கு வந்தன.  எந்த நேரமும் ‘ஒரு ஃபாக்டரி போல இயங்கிக் கொண்டிருக்கும், இந்த சென்ட்ரல் டெலெகிராஃப் ஆபீஸ்கள். டெலெகிராஃபிஸ்ட்கள் மோர்ஸ் கருவிகளுக்கு முன் அமர்ந்து, அபார வேகத்தோடு, துல்லியமாக ‘கட..கட..கட்டுக் கட..என செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள்.  பெரிய சைஸ் டைப்ரைட்டர்களைப்போல இருக்கும் “டெலி பிரிண்டர்களும், டெலக்ஸ் களும் ஓயாமல் செய்திகளை வாங்கிக் கொண்டும், அனுப்பிக் கொண்டும் இருக்கும்.  உள்ளே போனாலே பிரமிப்பாக இருக்கும். வேலை செய்தால் இந்த மாதிரியான அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என எவருக்கும் தோன்றும்.

தந்தி அலுவலகத்தின், இன்னொரு பக்கம் ‘பொதுத் தொலைபேசி கள் இருக்கும்.  பெரிய அலுவலகங்களில் நான்கு ஐந்து பூத்கள் கூட இருக்கும்.  பிரசவ அரையின் முன் காத்திருக்கும் "கணவர்கள்" போல தனது ‘கால்கள் (டிரங்கால் கள்) வரும் வரை தவிப்போடு காத்திருப்பார்கள். பத்திரிக்கை நிருபர்கள், பாங்க் அலுவலகங்கள், வானிலை ரிபோர்ட்கள் என பலரிடமிருந்தும் தகவல்கள் பறந்து கொண்டிருக்கும்.  24 மணி நேரமும் பிஸியாக இருக்கும்.

“தகவல் தொழில்நுட்ப புரட்சி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்ட்து.  தபால் போய், ட்ரங்கால்கள் வந்து, அதுவும் போய், எஸ்.டி.டி வந்து, அதுவும் போய் செல்ஃபோன்கள் வந்து,  ‘செல்போனும் ஒரு கட்டைவிரலும் இருந்தால் ‘உலகமே உங்கள் கையில். செல்ஃபொன் இருந்தால், தந்தி அலுவலுகத்திற்கு மட்டுமல்ல, ‘பேங்க்குக் கூட போகத்தேவையில்லை. அனைத்தும் உங்கள் கட்டைவிரலில்.

பொதுமக்களுக்கும், சமுதாயத்திற்கும் நல்லதாகவே இருக்கும் இந்த தகவல் தொழில் நுட்ப புரட்சி, தந்தி அலுவலகத்தில் பணி புரிந்த ஆட்களுக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்?  ‘P&T யில் உத்தரவாதமான சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள், DOT –க்கு வந்து, பின் BSNL  ஆக மாறி, மத்திய அரசாங்கத்தின்  “தன் வீட்டுக் குழந்தையை தானே கழுத்தை நெரித்துக் கொல்லும் விந்தை கொள்கைகளின் காரணமாக, இந்த நிறுவனமும் (BSNL) நொடித்துப் போய், அபாயகரமான  நட்டங்களை சந்தித்துக் கொண்டு, அடுத்த வருடம் ‘சப்பளம் வருமா என கவலையுடன் இருக்கும் இந்த BSNL அலுவலகர்கள் நிலை பரிதாபமானது அல்லவா?.

‘டெலகிராஃபிஸ்ட்களின் விரல்கள் தாண்டவ மாடிய ‘மோர்ஸ் மிஷின்களும்’,  டெலி பிரிண்டர்களும், எஸ்.டி.டி மானிட்டர்களும் இப்போது எப்படி இருக்கின்றன என அறிய விழைந்தேன். அவை விருந்து முடிந்த பின்னர் அகற்றப்படாத மதுக் கோப்பைகள் போல கவனிக்கப்படாமல், சீண்டப்படாமல், இறைந்து  கிடந்தன.  

சார் எல்லாம் ‘ஸ்கிராப்பில்  (காயலான் கடை) போடப்பட்டுவிட்டது என்றார் அலுவலர்.  வேண்டுமானால் ஒன்று இருக்கிறது பாருங்கள் என்றார். மோர்ஸ் மெஷின். அதன் அருகே சென்று மெஷினில் அடித்தேன்..  கட கட..கட்.............. (நான் இறந்துவிட்டேன் என).  


இக்கால இளைஞர்கள் ‘டிரங்காலுக்காக காத்திருதேன், ‘தந்தி அனுப்பினேன் என்ற வாசங்களைக் கூட நம்ப மறுப்பார்கள்.


சார்.. தந்தி வருமானம் ஏதாவது வருகிறதா என வினவினேன்.

மிகவும் விரக்தியான  முகத்துடன், “இல்லை சார்.  தந்தி அனுப்புபவர்கள் எவருமிலர்.  சட்ட ரீதியாக (ரிகார்ட் purpose-க்காக) தந்தி அனுப்ப எப்போதாவது அத்தி பூத்தாற்போல சிலர் வருவார்கள் என்றார்.


‘அப்போது தந்தி அனுப்ப என்ன செய்வீர்கள்? மோர்ஸ் தான் காணாமற் போய் விட்டதே? என்றேன்.  Internet மூலமாக அனுப்போவோம் சார்.  என்றார்.


இந்த தடாலடி மாற்றங்கள், ஒரு வகையில், வாழ்க்கைத் தத்துவத்தை சொல்வது போல கூட இருந்த்து.


எனினும்,  150 வருடங்களுக்கு மேலாக,  இந்திய மக்களுக்கு சேவை செய்து ஓய்ந்து, அழுக்குடன் குப்பையில் கிடக்கும் மிஷின்கள் சற்று வேதனையைத் தந்தன.

கால ஓட்டத்தில், விஞ்ஞான மாற்றத்தின் விளைவாக, பல்வேறு தொழில்கள் காணாமற் போய்விட்டன. சுவற்றில் சித்திரம் மற்றும் விளம்பரம் வரைவோர், சைக்கிள் வாடகைக் கடை,  கை ரிக்ஷா,  அம்மி-ஆட்டுக்கல் செய்வோர், சுண்ணாம்பு செய்வோர் என பலரும் காணாமற் போய்விட்டனர். இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?  வினவிப் பார்த்தேன். வாழ்க்கையின் நிர்பந்தங்கள் அவர்களை வேறு தொழிலுக்கு விரட்டி விட்டன.  தன்னை மாற்றிக் கொண்டவர்கள் ஏதாவது ஒரு வகையில் ஜீவித்துக் கொண்டுள்ளனர். மாற முடியாதவர்கள்? எதோ ஒரு ஹோடேலிலோ அல்லது கோவில் வாசலிலோ இருக்கின்றனர்.  சிலர் கூலிக்கு வேலை செய்து கொண்டுள்ளனர்.




It would take years
and countless tears
to wash away all the hate
that we have slowly create
that was been stored in our hearts
we have been scattered in to parts
like worthless outdated money
and no matter what anybody
says there is no shame
in the way that we feel
we are all the same
we just learn to deal
never miss a chance to heal! 

what has been said and done
neglected and worn down(beyond repair) 
i try to escape and run(no one seemed to care) 
not allowed to utter a sound (im speachless) 
only loneliness to be found(feel so helpless) 
keep it all inside
the worst thing we could do
keep it in morse code so
i have died 
and can not cry
the pain we deny
i really should let it all go
wishing to the misty heavens
it would always show
and through pouring rain clouds
on to purple flower petals
so we both can be found
everthing can finely settle 

2 comments:

  1. உண்மையிலேயே சோகமானது தான் இந்த மாற்றங்கள். மிக அதிக டிமாண்டில் உள்ள வேலைகள் வெகு சீக்கிரம் யாருக்கும் தேவையில்லாமல் போகும் விந்தையான வேதனை நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இடத்திலும் தெரிகிறது. சைக்கிள் ரிப்பேர், ரேடியோ ரிப்பேர், எஸ் டி டி பூத் வைத்திருந்த பார்வையில்லாதவர்கள் எல்லோரும் இப்போது என்ன பண்ணுகிறார்கள்? கொஞ்சம் யோசித்தால் கவலையாக இருக்கிறது, எப்போது நான் செய்யும் வேலை ஆப்சொலீட் ஆகுமோ என்று!

    ReplyDelete
  2. Learning. Learning lasts till the last breath. கற்றது கை மண்ணளவு. அரசாங்க வேலை, ஆயுசுக்கும் கவலையில்லை அப்படிங்கற நெனப்ப தூக்கிக் கடாசணும். அதுதான் இங்கு கிடைக்கும் படிப்பினை. அரசு ஊழியர்கள் படிப்பார்களா? சந்தேகமே!

    ReplyDelete