Saturday, October 22, 2011

பதினொரு நிமிடங்கள்

சிலரை “வசிய எழுத்தாளர்கள் என்று சொல்லுவார்கள். எக்கு தப்பாகவோ அல்லது வம்படியாகவோ கூட எழுதுவார்கள்; ஆனாலும் அவர்களது எழுத் தாற்றல், சொற்களின் தேர்வு, வாக்கிய அமைப்பு, வாதத் திறன், நடையின் நவீனம்,  நம்மைக் கட்டிப் போட்டுவிடும்.  நம்மையறியாமல் நாம் அவர்களது ‘பக்தர்களாகிவிட்டிருப்போம்.  இம்மாதிரியான எழுத்தாளர்கள் எப்போதாவதுதான் தென்படுவார்கள். “கான்ஷியஸாக படிக்க வில்லை என்றால், நம்மை அவர்களோடு இழுத்துச் சென்றுவிடுவார்கள் –  நமது “சோமாதிரி.  

இம்மாதிரியான எழுத்தாளர்களில் ஒருவர் Paulo Coelho. இவர் எழுதிய  “The Alchemist”   நாவலை வாசித்த சுகானுபவம், இவரது மற்றறொரு  நாவல் Eleven Minutes-ஐ படிக்கத் தூண்டியது.  கதை நேர்மையாகத் தான் இருக்கிறது! ஜாலங்கள் செய்ய வில்லை.


கதையின் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது: “ஒரு காலத்தில் மரியா என்று ஒரு விலை மாது இருந்தாள்..... “.   புத்தகத்தை மூடும் வரை இந்த டெம்போவைக் குலைக்காமல், உற்சாகத்துடன் கதை சொல்லிச் செல்கிறார் Paulo Coelhoஇவரது சிறந்த புத்தகங்களில் ஒன்றான The Alchemist –ஐ படித்துவிட்டு இதனைப் படித்ததால், இரண்டிற்கும் உள்ள வித்தி யாசம், நம்மை திடுக்கிட வைக்கிறது.

கதை, பிரேசில் நாட்டில் பிறந்த சிறுமி ‘மரியா’,  விடலைப்பருவ காதலில் அகப்பட்டுக் கொள்வதில் ஆரம்பிக்கிறது. பின் "ஜெனீவாவில்" எப்படி தடுமாறுகிறாள் என விவரிக்கிறது. "காதலையும், காமத்தையும்" மையமாகக் கொண்டு சொல்லப்படும்  இந்த ‘கத்தி மேல் நடக்கும் கதையினை, மிக சாமர்த்தியமாக சொல்லிச் செல்கிறார்.

இப்புத்தகம் வாசிக்க, ஒரு திறந்த மன நிலை (Open Minded State) தேவைப் படுகிறது.  இல்லையெனில் இந்த நாவல் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் பல வர்ணனைகளும், சம்பவங்களும்  Soft Porn வகையைச் சார்ந்ததாக இருக்கிறது. கதையின் முக்கிய கேரக்டர் ‘மரியா வின் பணியினையும், அவரது மன நிலையினையும் சேர்த்துப் பார்த்தால், இந்த வர்ணனைகள் தவிர்க்க இயலாதவை,  கதைக்கு தேவைப் படுபவை எனத் தெரியும்.

நாவலின் நடுவே வரும் ‘மரியாவின் டைரி கதைக்கு பளு சேர்க்கிறது, 
கதையை மேலே நகர்த்திச் செல்கிறது.  டைரியின் வரிகள் யாவும் புத்திசாலித்தனமாக, “பெண்களின் மொழியில் Convincing ஆக 
 சொல்லப் பட்டிருக்கிறது. லைப்ரரியனொடும், ஆர்ட்டிஸ்ட்டோடும் மரியா நிகழ்த்தும் உரையாடல்கள் மிக சுவாரஸ்ய மானவை. 

படித்துப் பாருங்கள். 

2 comments:

  1. பிரபாகரன் உங்கள் பதிவை அறிமுக படுத்தி வைத்தார், அவர் சொன்னதை போலவே நன்றா எழுதுறீங்க.....
    அப்புறமா வரேன டாட்டா,,,,,

    ReplyDelete