Saturday, March 17, 2012

நூற்றுக்கு நூறு...வாழ்த்து!


கடந்த சில மாதங்களாகவே, சச்சின் டென்டுல்கரின் 100 வது சதத்தினை முழு இந்தியாவும் எதிர்பார்த்திருந்தது. இந்த எதிர்பார்ப்பே, அவருக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இதன் காரணமாகவே, கடந்த ஒரு ஆண்டாக, அவரது கிரிக்கெட் காரியரில், ஒருவிதமான வறட்சி தென்பட்டது.
அவர் கடைசியாக அடித்த சதம், தென் ஆப்பரிக்காவுக்கெதிராக, சென்ற  ஆண்டு , மார்ச் 12 அன்று அடித்தது. அந்த மாட்சிலும் நாம் தோற்றுப் போனோம். “நூறு சதங்கள் என்பது சாதாரணமான விஷயம் இல்லை. சச்சின் போன்ற மேதைகளுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.
கிரிக்கெட்டின் தன்மையும், வேகமும் மாறிக்கொண்டே இருக்கும் இன்றைய சூழ்நிலையில், வீரர்கள் மத்தியில் நிலவும் கடுமையான போட்டிச் சூழ்நிலையில், இனி யாராவது நூறு சதங்களை அடிக்குமளவிற்கு ஃபீல்டில் "நிலைத்து" நிற்க முடியமா, சச்சினின் சாதனை முறியடிக்கப்படுமா என்பது சந்தேகம் தான்.
இவருக்கே 99-ஆவது சதத்திலிருந்து நூறை அடைவதற்கு ஒரு ஆண்டும், நான்கு தினங்களும் பிடித்தன. அதுவரைக்கும் நாமும் பொறுமையாக்க் காத்துக் கொண்டிருந்தோம்.  இந்த நூறாவது சதம், வங்கதேசத்திற்கு எதிராக இல்லாமல், வலுவான ஆஸ்திரேலியாவுக் கெதிராகவோ, இங்கிலாந்திற் கெதிராகவோ, ஏன் பாகிஸ்தானுக்கெதிராகவோ எடுக்கப்பட்டிருந்தால், நாம் இன்னமும் மகிழலாம்.
என்னவானாலும், “சர்வதே நூறாவது சதம்என்பது ‘ஸ்பெஷல்தானே? இவருக்கு அருகாமையில் இருப்பது 71 சதங்களை அடித்து முடித்திருக்கும் ரிக்கி பாண்டிங் மட்டும் தான்.
உலகில் எந்த ஒரு கிரிக்கட் வீரரும் (பிளேயர் என்பது எப்படி தமிழில் விளையாட்டு “வீரன்என்பது புரியவில்லை) எதிர்கொள்ளாத ‘பிரஷரை சச்சின் எதிர்கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவும் அவரது தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டது.
நல்ல வேளையாக, வங்கதேசம் அவரது “பிரஷர் வால்வினைதிறந்து புண்ணியம் கட்டிக் கொண்டது. மார்ச் 16, சரித்திரத்திலும் இடம் பிடித்துக் கொண்டது.
அவர் 80 ரண்களிலும், ஏன் 90 ரண்களுலும் அவுட்டான தருணங்கள் அநேகம். இங்கிலாந்திற்கெதிராக 91 ரண்களிலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 94 ரண்களுலும் சென்ற ஆண்டில் ஆட்ட மிழந்திருக்கிறார். ஏன் சிட்னி டெஸ்டில் கூட 80 ரண்களில் அவுட்டாகி உள்ளார். ஒவ்வொரு முறையும், பிட்சில் பேட் செய்ய இறங்கும் போதும், இந்த முறை நூறாவது சதம் அடிக்க வேண்டும் என நூறு கோடி மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். அனைவரது கனவும் மார்ச் 15 வரை நனவாகமாலே இருந்தது! எனவே இந்த மகத்தான தருணம் சச்சினுக்கானது, அவர் இதை அனுபவிக்கட்டும்!.
அவர் தனது சர்வதேச கிரிக்கட் வாழ்வினைத் துவக்கியது தனது 16-ஆவது வயதில். தற்போது அவருக்கு வயது 38.
டெஸ்ட் பந்தயங்களில் 15,000 ரண்களுக்கு மேலும், லிமிடெட் ஓவர் பந்தயங்களீல் 18,000 ரண்களுக்கு மேலும் சேர்த்த ஒரே பிளேயர் இவர்தான்.
இனி அவர் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், தனது இயல்பான ஆட்டத்தை விளையாடலாம்.  

என்றாலும் எல்லோருடைய மனதில் எழும் கேள்வி அவருக்குத் தெரியாமலா இருக்கும்?

‘எப்பொழுது? என்பதை அவரே தீர்மாணிக்கட்டும்!

ஏனெனில், ‘பக்கத்து பிட்சுக்கு போலிங் செய்த கபில்தேவைப் கண்டு, “உஸ்... அப்பாடா.. ஒரு வழியாகத் தீர்மாணித்தாரா கபில்தேவ்! என்று ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமூச்சு விட்ட கதை, சசசினுக்கும் தெரிந்திருக்கக் கூடும்.

No comments:

Post a Comment