Tuesday, July 22, 2014

கற்பழிப்பும் - தூக்குத் தண்டனையும்.


முக நூலில் கற்பழிப்புக் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை தேவையா-இல்லையா என ஒரு ‘வாக்கெடுப்பு’ நடத்தும் செய்தியினைப் படித்தேன். அந்த செய்தியில் எனது ‘கமெண்டாக’ நான் எழுதியிருந்தது:
------------------------------------------------------------------------------------------
இந்த கருத்துக் கணிப்பு வெட்டி வேலை.

‘ஆம்’ என்று சொன்னால் பெங்களூர் கிராதகனை தூக்கில் போட்டு விடுவார்களா?

அடிப்படைக் காரணங்களை ஆராயாமல், மேம்போக்காக எழுதப்படுபவை இவை.
கடுமையான தண்டனைகள் இருக்கும் சில நாடுகளில், கற்பழிப்பு நடக்கவே இல்லையா?
“பெண் சிசுவைக் கொல்லாதே” என்று ஆட்டோ பின்னால் எழுதுவதற்கும் இந்தப் பிரச்சினைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஏன் பெண் குழந்தைகள் வேண்டாம் என்கின்றனர்? இதன் ஆதார காரணத்தை அறியா விட்டால், இன்னும் எத்தனை பிரச்சாரங்கள் நடந்தாலும், பெண் சிசுக் கொலைள் நடந்தே தீரும்!

ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணச் செலவு மட்டுமே 30 லட்சம் என்றால் (இதைத் தவிர ஆண் குழந்தைகளைப் போலவே படிப்புச் செலவு, வாகணச் செலவுகள் அனைத்தும் உண்டு; திருமணத் திற்குப் பின்னரும் தொடரும் சீர்வரிசை சடங்குகள்! ), எவன் (சாதாரண குடும்பங்களில்) பெண்ணைப் பெற்றுக் கொள்ள விரும்புவான்? திருமணக் கொள்ளையை நிறுத்தாமல் எதுவும் சாத்தியப்படாது!!

அது போலவேதான் இந்த வன்புணர்வு நிகழ்வுகளும்.
கற்பழிப்புகளுக்கு கடுமையான தண்டனை தேவையே! ஆனால் மக்கள் ஏன் இப்படி ‘செக்ஸ்’ வெறி பிடித்து அலைகின்றனர் என்பதற்கான காரணத்தையும் ஆராய வேண்டும்.

தெரிந்து கொள்ளுங்கள்!

மக்களின் ரசனைகள் உருவாக்கப் படுகின்றன.
கலாச்சாரங்கள் திட்டமிட்டு உடைத்தெறியப் படுகின்றன.
இவற்றைப் புரிந்து கொள்ள சர்வதேச அரசியல் சதிகளை தெரிந்து கொள்ளும் நுணுக்கம் வேண்டும்.

இன்டர்நெட்டும், செல்ஃபோன்களும் சப்தமின்றி செய்யும் கலாச்சார சீரழிவுகளை, களைவது யார்?

இந்த வேலையை மீடியாக்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில் அனைத்து மீடியாக்களும் ‘பெரியண்களின்’ அடிவருடிகளே! மீறி நடந்து கொண்டால் மீடியா நடத்த முடியாது!

இதனால்தான் கலாச்சாரத்தை காப்போம் என்ற கோஷம், சிலரால் எழுப்பப் படுகிறது!

பிரச்சைனை என்னவென்றால்,
இந்த தலைமுறையினருக்கு தமிழில் பேசினால் அசிங்கம், பேச வெட்கம்.
கூட்டுக் குடும்பம் ஆகாது!
பெரியவர்களை மதிக்கத் தெரியாது!
நமது கலாச்சாரம் புரியாது!

சினிமா நடனங்களை ‘மியூட்’ செய்து பாருங்கள். எவ்வளவு அறுவருப்பு! ஆபாசம்!! மாகசின்களில் பாதிக்கு மேல் ‘சினிமா’ கவர்ச்சி!! நமக்கு பார்த்து-பார்த்து மரத்துப் போய்விட்டதுதான் சோகம்.

பெண்களுக்கான ‘டிரஸ் சென்ஸ்’ உருவாக்கப் படுகிறது. ‘வெளிக்காட்டுதல்’ நாகரீகம் என்பது சகஜமாகிவிட்டது.
போதாக் குறைக்கு இந்தியா முழுவதும் பெருகி ஓடும் சாராயம்.
இவ்வளவு அபத்தங்களையும் அனுமதித்துவிட்டு, அனுபவித்துவிட்டு, ‘ஆ.. கற்பழிப்பு’ என்று அலறுவது நம்மை எங்கும் கொண்டு போய்ச் சேர்க்காது!

மொழியை அழித்து, கலாச்சாரத்தை அழித்து, ஏகபோகமாக கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு, இம்மாதிரியான சீரழிவுகள் தேவை! துச்சாதனர்களையும், இராவணன்களையும் இவர்கள் தான் உருவாக்கு கிறார்கள். கயவர்களை விட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை-தண்டிக்க வேண்டியது தான். கூடவே இதையும் சேர்த்துப் பாருங்கள் என்கிறேன்.

“பெரியண்ணன்கள்” தங்களது சதியை மறைக்கத்தான் ‘தூக்கில் போடும் நாடகமும்..’

“ஆசிரியர்களே” இம்மாதிரியான கற்பழிப்புகளை நடத்துகிறார்கள் என்றால், நமது சமூகம் எவ்வளவு புறையோடிப் போயிருக்க வேண்டும்.

இந்த நாட்டு பெண்களின் நிலையை நினைத்தால் நெஞ்சில் உதிரம்  கொட்டுகிறது!

2 comments:

  1. உங்கள் வாதம் அத்தனையும் உண்மைதான்

    ReplyDelete
  2. இத்தகைய நடத்தை குறைவுக்கு நான் ஒரு காரணம் சொல்வேன் . சண்டை பெரிதாக வரும் . வேண்டாம் ..

    அரசு

    ReplyDelete