Wednesday, March 18, 2015

பெங்களூரில்....


நேற்று, பெங்களூரில் ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு நிகழ்ந்த 

கொடுமை பற்றி நண்பர் Viswanathan Managalam வருத்தப் பட்டு 

எழுதியிருந்தார். பின் வரும் கொட்டேஷனையும் குறிப்பிட்டிருந்தார்..

As far back as 1979, Justice V.R. Krishna Iyer observed in a judgment in his inimitable style: “Fearless investigation is a ‘sine qua non' of exposure of delinquent ‘greats' and if the investigative agencies tremble to probe or make public the felonies of high office, white-collar offenders in the peaks may be unruffled by the law. An independent investigative agency to be set in motion by any responsible citizen is a desideratum.”   Now, What has happened to the honest IAS officer at Bengaluru ? People of India expect an impartial probe to find out the culprits behind this death.

இந்த அவலத்திற்கு என்ன காரணம் எனவும் வினவினார்.
நமது சமுதாயமே ‘சில பண்புகளை இழந்துவிட்டது’ தான் காரணம்   (Society, as a whole, lost many morals)” எனச் சொல்லியிருந்தேன்.
நாம் எதையெல்லாம் இழந்தோம் என்பதை எண்ணிப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது.

கலாச்சாரத்தை இழந்தோம்! கலைகளை இழந்தோம்! பண்புகளை இழந்தோம்! மானுடத்தை இழந்தோம்! அதி முக்கியமாக நமது தேசப் பண்புகளை இழந்தோம். கூட்டுக் குடும்பங்களை இழந்தோம்.

இன்னும்.. இன்னும்.. எவையெல்லாம நமது தேசத்திற்கே உரித்தானவையாக இருந்ததோ, அவற்றையெல்லாம் இழந்தோம்.
200 வருட இஸ்லாமியர்கள் ஆட்சியில் கூட இவ்வளவு இழப்பு இல்லை.. ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும், அதன்  பின் வந்த ‘காங்கிரஸ்’ ஆட்சியிலும் தான் இழப்பு பிரமாண்டம்.

தற்போதைய நிலையை நினைத்தால், மூத்த தலைமுறையினருக்கு மனம் கசியும் தான். சமூக சிந்தனையற்றுப் போய், சுய நலப் பிண்டங்களாக மாறி, என் வயிறு, என் மனைவி, என் சுகம் என்று மாறிவிட்டோம்.
இப்படி கேடுகெட்ட ஜென்மங்களாக இருப்பது குறித்து நமக்கு வருத்த மேதும் இல்லை. வெட்கமும் இல்லை. இது ஒரு இழி நிலை என்ற பிரக்ஞை கூட இல்லை.

எவ்வளவு கொலைகள்?  எவ்வளவு கொள்ளைகள்? எவ்வளவு கற்பழிப்புகள்? எவ்வளவு அட்டூழியங்கள்? அனுதினமும்!
கொள்ளை எனில், முகமூடி அனிந்து கத்தியைக் காட்டி அடிப்பது மட்டும் அல்ல! ராஜாக்களும், ‘மணி’ களும், லாலுக்களும் தான். தமிழ் நாட்டில் கேட்கவே வேண்டாம்.. கொள்ளை என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியலாகி விட்டது. எவருக்கும், இந்த அவல நிலை குறித்து கோபமும் இல்லை.. போராட வேண்டும், மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. வெள்ளைக்காலர் கொள்ளைகள் சட்டத்தினால் தண்டிக்கப் படுவது அபூர்வமாகிவிட்டது.

மக்களோ, அன்றைய சாராயத்திற்கு காசு கிடைத்தால் போதும் என்ற அளவில் திருப்திப் பட்டுக் கொள்ளும் அவலம். சாரயத்திற்கான காசு எப்படி வேண்டுமானலும் வரலாம்; திருடலாம்-கொள்ளையடிக்கலாம்-ஏமாற்றலாம்-லஞ்சம் வாங்கலாம்- தன் வீட்டிலேயே தானே திருடலாம் -பஞ்சமா பாதங்கள் எதையும் செய்யலாம்.

முழுச் சமுதாயமும், இளைஞர்கள்-மாணவர்கள் உட்பட மதுவின் பிடியில்  அமுங்கிக் கிடந்தால், அவர்களிடம் என்னத்தைப் பேசுவீர்கள்?

அரசு அலுவலகங்களில் தண்டவமாடும் ‘லஞ்சம்’  ஒரு parallel அரசு போல செயல்படுகிறது.

இது தவிற ஜாதி வெறி, மதவெறி, இன வெறி, மொழி வெறி, மது வெறி, காம வெறி, பண வெறி.. என சகல வெறிகளும் நம்மை ஆட்கொண்டு விட்டன. சிந்திக்கும் திறனை முற்றாக இழந்து, மூடர்களைக் கொண்ட சமூகமாக மாறி விட்டோம்.

இது ஏதோ எதிர்மறை சிந்தனை என எண்ண வேண்டாம். நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த காலத்திலும் கெட்ட மனிதர் இருந்த எண்ணிக் கையைப் போல. இவர்கள் சக்தியின்றி ஒரு ஓரமாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தி பூத்தாற்போல், சில அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், சமூக நலத் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள், கொள்ளையர்களை ரொம்பவும் இம்சிக்காமல், “ஒரு ஓரமாக    நின்று கத்திக் கொண்டிருக்கும் வரை” நமது ‘அரசியல் தாதாக்கள்’ பொறுத்துக் கொள்வார்கள். கொஞ்சம் மீறினால்... போட்டுத் தள்ளு...

எத்தனை தாசீல்தார்கள் மீது லாரி ஏற்றப்பட்டிருக்கிறது? எத்தனை அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்? நமக்கு அவர்களைப் பற்றி கவலையேதும் உண்டா?

அதுதான் தற்போது பெங்களூரிலும்...

இவற்றை, நாமும் வெறும் செய்தியாகப் படித்துவிட்டு, அன்றாடக் கவலையான நமீதாவின் மார்பை வேடிக்கை பார்க்க கிளம்பிவிடுவோம்.. 

நமக்கு பெண்கள் என்றாலே வெறும் உடல்தானே? சை...

இவற்றையெல்லாம் கொஞ்சமும் மாற்ற முடியாதா?
எங்கே தவறிழைத்தோம்?

நாம் நமது பாரம்பர்ய கல்வி முறையினை இழந்ததில் ஆரம்பித்தது கோளாறு. பாரம்பர்ய கல்வி எனில், திண்ணைப் பள்ளிகளைச் சொல்லவில்லை. நமது கலாச்சாரத்தினை கற்றுக் கொடுக்கும் கல்வியினை.

ஆங்கிலேயர்கள், பியூன் வேலைக்கும், கிளார்க் வேலைக்கும் கொண்டுவந்த கல்வியைத்தானே இன்னமும் கடைப்பிடிக்கிறோம்? மனிதப் பண்புகள், குடும்ப மேன்மைகள் (Values of family) குறித்து எங்கே கற்கிறோம்?

நம் நாட்டைப் போல வெகு வேகமாக அடையாளங்களை இழந்து, கன்ஸ்யூமரித்திலும் - புலன் இன்பத்திலும் திளைக்கும் நாடு வேறு எங்கும் பார்க்க முடியாது. இத்தனைக்கும் மிகப் பெரிய பாரம்பர்யம் கொண்ட நாடு நமது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் சில வெள்ளைக்காரர்கள் எழுதிய சில புத்தகங்களைப் படித்துப் பாருங்கள். நமது உணவு-குடும்பக்-கலாச்சாரம்-கலைகள் குறித்து வியந்து எழுதியிருக்கிறார்கள். இவை அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன.

புரிந்து கொள்ள வேன்டும்...சமூகத்தில் சில செக்ஷன்கள், என்றென்றும் மாற்ற முடியாத பண்புகளைக் கொண்டதாக இருப்பது சமுதாய தேவை.. ஆசிரியர்கள்-நீதிபதிகள்-வக்கீல்கள் - மத குருமார்கள்-வியாபாரிகள்-ஆட்சி அதிகாரம் உடையோர் ஆகியோர்களே அவர்கள்.

நமது தர்மம், மேலே குறிப்பிட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் குறித்து விரிவாகவும்-கண்டிப்புடனும் பேசியுள்ளன. ஏனெனில் இவர்கள்தான் நாட்டை உருவாக்குபவர்கள்.

ஆனால், இந்த பிரிவினரின் தரம் தற்போது எப்படி இருக்கிறது என்பதை விளக்கவும் வேண்டுமா? தேசத்திற்கு வழிகாட்டி, தலைமுறையினை உருவாக்கும் நபர்களே கேவலமாக இருக்கும் பொழுது, நாடு எப்படி உருப்படும்?

இனி, நாம் நமது பாதைக்கு திரும்புவது, மிக..மிக அசாத்தியமான காரியம்.
அவ்வளவு தூரம் பின் நோக்கி சென்றுவிட்டோம்.

கொஞ்சம் சரியாகப் பேசக்கூடிய சில அமைப்புகளும் கூட செக்டேரியன் போக்கில் மாட்டிக் கொண்டுவிட்டன..

காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஒரு வேளை நமது பேராசையின் விளைவுகளைப் பொறுக்காமல், இயற்கையோ கடவுளோ சீறியெழுந்து மனித குலத்தையே அழித்தால்தான் திருந்துவோம் போல...



No comments:

Post a Comment