Monday, March 30, 2015

திருவாடுதுறை...

காலங்கள் தோறும், வேதாகமங்கள் முதலாக, இன்று ஜக்கி வாசுதேவ் வரை ஆன்மீக விளக்கங்கள் பலரால் அளிக்கப்பட்டு வந்துள்ளன. 

நமது அதிர்ஷ்டம் என்னவென்றால், ஆன்மீக சிந்தனைகள் யாவற்றையும் ரத்தினச் சுருக்கமாக, தெளிவாக, ஆணித்தரமாக, சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வண்ணமாக, இதைவிட வேறு எவராலும் இவ்வவளவு ஆழமாக கூறிவிட இயலாத வண்ணம், தெள்ளிய தமிழில், துல்லியமாக, நயமாக, நெருக்கமான பொருளுடன் கூடிய நூல் ஒன்றினை  நாம் தமிழில் பெற்றிருப்பதுதான்.

துரதிர்ஷடம் என்னவென்றால், நமது கையில் இருப்பது என்ன வென்றே தெரியாத குருடர்களாக இருப்பது தான்.

திருமூலர் யாத்த “திருமந்திரம்” தான் அது.

இப்புத்தகத்தின் வீச்சு எந்த அளவிற்கு மக்களிடம் போய்ச் சேரவேண்டுமோ அந்த அளவிற்கு சென்றடையாத, அபாக்கியம் பிடித்தவர்கள் நாம்.
ஈடு இணையற்ற பெரும் பொக்கிஷம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு திண்டாடி வருகிறோம்.

திராவிடக் கட்சிகள் செல்வாக்கு துவங்கிய காலம் தொட்டு, தமிழின் சிறப்பான சமய இலக்கியங்கள் யாவும் இருளிலேயே வைக்கப்பட்டன. 
அப்படிப்பட்ட ஒரு நூல்தான் இங்கே குறிப்பிடும் “திருமந்திரம்”.

திருமந்திரத்தையும், திவ்விய பிரபந்தத்தையும், பெரிய புராணத்தையும் புறம் தள்ளிவிட்டு எப்படி தமிழைக் கொண்டாடுகிறோம் எனப் புரியவில்லை. அதை விடுங்கள்.. அதுதான் தமிழகத்தின் தலையெழுத்து.

எனது பெருவிருப்ப நூலான திருமந்திரம், திருமூலர் அவர்களால், வருடத்திற்கு ஒன்றாக மூவாயிரம் வருடத்தில் எழுதிய முவாயிரம் பாடல்களைக் கொண்டது. “மூவாயிரம் வருடமா?” என கேள்வி கேட்பதைவிட மூவாயிரம் மந்திரங்களில் ஒரு நூறு மந்திரங்களப் புரிந்து கொண்டால் கூட போதுமானது எனக் கருதுகிறேன். காலம் அப்படி நினைக்கத் தோன்றுகிறது.

அந்த மகான் ஜீவ சமாதி அடைந்த இடம், மயிலாடுதுறையிலிருந்து (மாயூரம்) மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாடுதுறை. 

இங்குள்ள திருக்கோயிலையும், திருவாடுதுறை ஆதீனத்தையும் பிரித்துப் பார்க்க இயலாதபடி பின்னிப் பிணைந்துள்ளது வரலாறு.

இக்கோயில் கி.பி ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது.

ஈசன் “ஸ்ரீ கோமுக்தீஸ்வரர்”. ஈஸ்வரி “ஸ்ரீ அதுல்ய குஜாம்பிகை”.

இங்குள்ள மகா நந்தி 14’-9” உயரமும், 11’ -3” அகலமும் கொண்ட தமிழகத்தின் மிகப் பெரிய கல் நதி நந்தி. ஸ்ரீ அணைத்தெழுந்த நாயகர், மாசிலாமணிஸ்வரர், ஸ்ரீ புத்திரத்தியாகேசர், சுப்ரமணியர், வினாயகர் சன்னதிகளும் உள்ளன.

அனைத்துச் சிற்பங்களும் பேரழகு! உற்சவ மூர்த்தங்கள் யாவரையும் ஒரு சேரப் பார்க்கலாம். ஒவ்வொன்றும் பேரழகு!

மாயவரத்திற்குப் பக்கத்தில் தானே! ஒரு முறை சென்று வாருங்களேன்.

திருமூலரின் சன்னதியில் நின்று மெய்சிலிர்ப்பதை உணருங்கள்!!

சில படங்கள் கீழே...

பெரிய கோபுரம் 


உட்கோபுரம் செல்லும் வழி 

ஸ்ரீ கோமுக்தீஸ்வரர் சன்னதி அருகே ஒரு சிற்பம்,


உட்கோபுரம் - இன்னொரு படம் 

உட்கோபுரம் 

மகா நந்தி 


திருமூலர்  சன்னதி அருகே 

திருமூலர் சன்னதி.


கோயில் அருகே ஒரு குளம் 

கோவிந்தபுரம் பண்டரிஸ்வரர் கோயில் முகப்பு 

101 நாட்கள் நடக்கும் புருஷ சுத்தி ஹோமம் 

கோபுரம் 

கோவிந்தபுரம் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானம் 

No comments:

Post a Comment