Tuesday, April 21, 2015

ஏன் போராடுகிறார்கள் - பகுதி இரண்டு...

தொலைபேசித் துறையினரின் போராட்டத்தைக் கூறி (ஒரு காலத்தில் தொலை பேசிக்காக காத்திருந்ததாகவும் - துறையில் ஊழல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனது பதில்:

தொலைபேசிக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருந்தது P&T ஆகவும் DOT (Department of Telecommunication ) ஆக இருந்த பொழுது தான்.

இன்னும் சொல்லப் போனால், அக்காலத்தில், தொலைதொடர்பு இலாக்காவே தனியாக இல்லை. P&T Department-ல் டெலிகிராஃப் என்ற பிரிவினுள் வந்ததுதான் தொலை தொடர்புத்துறை. டெலிகிராம் தான் மிகப் பெரிய டெக்னாலஜி. Post Master General தான் P&T ஐ பார்த்துக் கொண்டார். பிறகுதான் DoT form ஆயிற்று.

மேற் சொன்ன இரண்டு இலாக்காகளும், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருபவை. வரவுகள் அனைத்தும் அரசையே சேரும். செலவுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு இருந்தால்தான்.

அப்பொழுதெல்லாம், ஒரு சிறிய எக்சேஞ்ச் (தொலைபேசி நிலையம்) வாங்கனும் அல்லது நிர்மாணிக்க வேண்டும் என்றாலும் பட்ஜட் ப்ரொவிஷன் இருந்தால்தான் சாத்தியமாகும். கேபிளும் அப்படித்தான்.

பட்ஜட்டில் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு இல்லை. சாதனங்களும் வாங்க வில்லை. சுவிட்சஸ் கூட (தொலைபேசி நிலைய எக்யூப்பென்ட்) கூட வாங்க காத்திருந்தோம். எனவே டிமாண்ட் கடுமையாக இருந்தது. தேவைக்கும் சப்ளைக்கும் இடையே தேவையற்ற இடைவெளி இருந்தால் சேவைக் குறைபாடு இருக்கும் தான்.

அப்பொழுது திரு ராஜீவ் காந்தி அவர்கள், “We have already missed Industrial Revolution and we cannot miss the electronic revolution” என்று முடிவெடுத்து, புதிய டெக்னாலஜிகளைப் புகுத்தினார். சாம் பிட்ரோடா அவரது காலத்தில் வந்தவர் தான். நிதி ஒதுக்கீடு தாராளமாக அனுமதிக்கப் பட்ட்து. அதன்பின்தான் தொலைதொடர்பு அசுர வளர்ச்சி கண்டது. கேட்டவுடன் தொலைபேசி என்பது கிட்டத்தட்ட சாத்தியமானது.

உங்களது குற்றச் சாட்டு, அடிப்படையில் இரண்டு விஷயங்களைக் கொன்டுள்ளது. (1) திறமையின்மை (2) ஊழல்.

1. திறமையின்மை: ஊழியர்களின் திறமை குறித்து உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். 100 வருடங்களாக, பல்வேறு டெக்னாலஜிகளைக் கையாண்டவர்கள். எதையும் கையாளும் நம்பிக்கையும் திறமையும் கொண்டவர்கள்தான். எங்களது இஞ்சினியர்கள் வெளி நாடுகளில் நாங்கள் தொலைதொடர்பு அடிப்படைகளை நிர்மாணித்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய திறமை பெரும்பகுதி ‘உபகரணங்களைச்’ சார்ந்த்தாகிவிட்டது. அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கவிடாமல் தடுத்தால் எப்படி தரமான சேவை வழங்க முடியும்? BSNL நிறுவனத்தை அதன் வளர்ச்சியை, நல்ல சேவையினை கொடுக்கும் சந்தர்பத்தை ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே கெடுத்தனர்.

தொலைதொடர்புத்துறை அமைச்சராக அந்த பொழுதில் யார் இருந்தனர் என்பதை உங்களுக்கு நான் சொல்லி விளங்கவைக்க வேண்டியதில்லை. பெரும்பாலும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள்தான்.

DEEP ROOTED CONSPIRACY TO WEAKEN BSNL

Undoubtedly, it is because of the deep rooted conspiracy between the private operators and the politicians in power, that BSNL lost the race, and has gone into loss. As a result of this conspiracy, BSNL was not allowed to expand its mobile network for almost six to seven years. In 2007, BSNL’s tender, to procure 45 million line mobile equipments was cancelled by the then telecom minister A Raja. This was done purely to block BSNL’s network expansion, so that the private operators can get benefited. The entire BSNL employees had gone on a one day strike in July 2007, demanding not to cancel that tender. Again, the home ministry raised objections when BSNL was about to procure equipments from a Chinese company in 2010, through its mega tender floated to procure 93 million line mobile equipments. Finally, this tender was also cancelled. The objection of the home ministry was that, being a government company, BSNL should not procure equipments from a Chinese company, since it would be a threat to the national security. At a time when all the major private telecom operators were procuring equipments from Chinese manufactures, it was malicious on the part of the home ministry, in restraining BSNL to do the same. This was done with the sole intention of curtailing BSNL’s growth. Through the Neera Radia tapes, it became amply clear to what extent various ministries are being influenced by the corporates. It is because of these well calculated road blocks created in BSNL’s equipment procurement programme, the company was not able to expand and upgrade its networks on time, which resulted in network congestion and deterioration in the quality of its services.

TELECOM MINISTER’S CONFESSION

In his interview to the CNBC-TV18 on February 28, 2015, Ravi Shankar Prasad, minister for communications and IT has made the following confession. “Both these companies (read BSNL and MTNL) were in profit by the year 2005-2006, thousands and thousands of crore. What happened in the subsequent years that they have come under such a critical state? Something which I can openly tell you today, that every attempt was made that they are not allowed to expand.” Ever since Ravi Shankar Prasad became the minister, he is echoing this view. What the minister says is 100 per cent correct. But, it is already ten months since he took over. He has done precious little to undo the injustice that has been meted out to BSNL.

இந்தச் சூழ்னிலையில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது BSNL ஊழியர்களுக்கு?

நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என விழைகிறேன். இது பி.ஜே.பிக்கு எதிரான போராட்டம் இல்லை. இப்போராட்டம் அவர்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள.. நெடிய பாரம்பர்யமுள்ள இந்திய தொலைதொடர்புத்துறையைக் காப்பாற்ற..
காங்கிரஸ் காலத்திலும் கூட, துறையின் விரிவாக்கம் வேண்டி வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். கட்டுரையின் நீளம் கருதி சுருக்கிக் கொள்கிறேன்.

2. ஊழல்:

தொலைதொடர்புத்துறை ஊழல் யார் செய்தது நன்பரே? நாடே நாறிப் போய்க்கிடக்கிறது இந்த ஊழலால். இன்னும் சொல்லப் போனால், இந்த ஊழலை வெளிக் கொணர்ந்ததில், தொழிற்சங்கத்தின் பங்கு மிக அதிகம். அது யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.

எப்படி இருந்தாலும் ஊழியர் / அதிகாரிகளிடம் ஒழுங்கீனம் இருந்தால் அவற்றை எவரும் ஆதரிக்க வில்லை – அங்கீகரிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சேவைக் குறைப்பாட்டினை தெரிவிக்க, பொதுமக்கள் நேரில் போய்த்திட்ட BSNL - ல் ஒரு அலுவலகம் இருக்கிறது. தனியாரிடம் யாரிடம் போய் முறையிடுவீர்கள்? பெட்டிக் கடையிலா?

BSNL – லின் தொலைபேசிக் கட்டணங்களில் எந்த முறைகேடும் இல்லை. வெளிப்படையான பிலகள். முறையீடு செய்ய அலுவலகங்கள்.. அதிகாரிகள் என எல்லாமே இருக்கிறது.

எனவே, இந்தப் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்.

நாட்டின் பாதுகாப்பிற்காகவும், தனியார் நிறுவனங்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க்கவும் அரசுத்துறை அவசியமாகிறது.

நீங்கள் என்னவோ சொன்னீர்களே? என்ன அது? ஆங்...அரசு கையில் இருந்தால் எப்படி துறை நாசமாய்ப் போகும் என..

நன்பரே... பம்பாய் பெருமழையில், மற்ற தனியார் நிறுவனங்கள் தங்களது ‘எக்யூப்மென்ட்களை’ காப்பாற்றிக் கொள்ள டவர்களை சுவிட்ஸ் ஆஃப் செய்துவிட்டுச் சென்ற பொழுது, டவர்களை இயங்க வைத்தவர்கள் நாங்கள். காஷ்மீர் வெள்ளத்தில், முதலில் டவர்களை இயங்க வைத்தவர்கள் நாங்கள். ஏன்... தானே புயலில், சின்னாபின்னாமான நிலையிலும், இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து, தொலைபேசி நிலையங்களை இயங்க வைத்தவர்கள் நாங்கள். ஓராயிரம் உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாக, தேசபக்தி என்பது எங்களது இரத்தத்தில் ஊறியது. ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து வரும் சந்தர்ப்ப தேசபக்தி அல்ல எங்களுடையது.

இப்படியே அரசுத் துறைகளுக்கு எதிரான கருத்துக்களை வளர்த்துக் கொண்டே சென்றால், நாட்டின் ராணுவத்தைக் கூட, தனியாரிடம் கொடுத்துவிடலாம். ஏன்.. அமெரிக்காவிடமே கொடுத்துவிடலாம். இன்னும் புதிய தளவாடங்களை கொண்டுவந்து இறக்கிவிடுவார்கள்! செய்யலாமா?

நேற்று, சிவசேனாவைச் சார்ந்த எம்.பிக்கள் தனியார் நிறுவங்களைக் கண்டித்து தர்ணா இருந்தது பற்றி, கூட செய்தித்தாளில் படித்திருப் பீர்களே? இந்தப் போராட்டத்தில், பி.ஜே.பி ஐச் சார்ந்த, BSNLMS யூனியனும் இதில் பங்கு பெறுகிறது என்பது உங்களுக்கு கூடுதல் தகவலாகச் சொல்கிறேன்.

No comments:

Post a Comment