Wednesday, May 27, 2015

நிசர்கதாமா பார்க் - கந்தம்பாரா அருவி - அப்பி ( Abbi) அருவி

நிசர்க்கதாம் பார்க்


கர்னாடகாவில், குஷால் நகர்  என்ற இடத்தில், காவிரி ஆறு, சட்டெனெ இரண்டாகப் பிரிந்து,  பின் இணைகிறது. நடுவில் ஒரு 10 ஏக்கர் அளவில் ஒரு சிறிய தீவு உண்டாகி இருக்கிறது. அத்தீவை மரம், செடி-கொடிகள் வளர்த்து, சிறுவர்களுக்காக ரோப் சவாரி, யாணை சவாரி, படகு சவாரி ஆகியவற்றைச் செய்து, ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றி இருக்கிறார்கள். குழந்தைகளும், காதலர்களும் ரசிக்கும் இடம். "காவேரி நிசர்க தாமா" என்று பெயர் பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன பொருள் என வினவப்போய்  விரோதமாகப் பார்த்தனர்.  கன்னடம் அறிந்தவர்கள் சொல்லுங்கள். 







அப்பி (Abbi) நீர்வீழ்ச்சி…

மடிகராவிற்கருகில் ஒரு அழகான நீர்வீழ்ச்சி இருக்கிறது. வருடம் முழுவதும் அனேகமான நீர் விழும் அருவி. மே மாதத்திய வெப்பத்தில் கூட கொஞ்சம் நீர் இருந்தது.  அதுவே மிகவும் அழகாக இருக்கிறது. அருவியை எதிரே இருக்கும் தொங்கு பாலத்திலிருந்து பார்க்க வேண்டும்.  நீர்த்திவலைகள் முகத்தில் பன்னீர் தெளித்து வரவேற்கும். அருவியை அப்ரோச் செய்யும் குறுகலான பாதைகூட சோலைவனமாக இருக்கிறது. அதிக நீர் இருக்கும் சமயத்தில் பார்த்தால், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ரசிக்கக் கூடிய இடம்.








கந்தம்பாரா அருவி:

வய நாட்டில், கண்ணை கொள்ளை கொள்ளூம்  மற்றொரு அருவி, கந்தம்பாரா அருவி. திருசூர் அருகே இருக்கும் அதிரப்பள்ளி அருவி போல இருக்கிறது. ஆனால், இங்கே அவ்வளவு கூட்டம் இல்லை. ஏனெனில் இங்கும் ஒருகிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டியிருக்கிறது. டிரெக்கிங்க் இல்லாமல் வயனாடு இல்லை. ஆனால் உள்ளே சென்றுவிட்டால் பிரமாதம். காலை முதல் மாலைவரை, அருவியையும், அது ஏற்படுத்தும் மதுரமான ஓசையையும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பிரமாதம் போங்கள்.

செல்ல்ம் வழியே அழகு

மேலிருந்து

கந்தம்பாரா அருவி




No comments:

Post a Comment