Thursday, May 28, 2015

கர்நாடகத்தில் ஒரு தகதகக்கும் தங்கக் கோவில்

மடிக்கராவிலிருந்து (குடகுப் பகுதி)  24 கி.மீ தொலைவில் ஒரு பிரமாதமான புத்தர் கோவில் (விஹாரம்) உள்ளது.  இதை 'தங்க கோயில்'  என்கிறார்கள். உண்மைதான்.  இங்குள்ள பிரமிப்பூட்டும் சிலைகள் யாவும் செப்பால் செய்யப்பட்டு, தங்க முலாம பூசப்பட்டவை.  

கீழே உள்ள  படங்களைப் பார்த்தால் புரியும், எவ்வளவு பிரமாண்டமான கட்டிடங்கள், சிலைகள் என.   
இதைப்  புத்த விஹாரம் என்பதைவிட நேபாளிய புத்த மதத்தைச் சார்ந்தவர்களின்  குடியிருப்பு என்று சொல்வதே தகும்.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் இருக்கின்றனர். காசி "சாரநாத்தில்" கூட இவ்வளவு பிக்குகள் இல்லை. இங்கே  அவ்வளவு பேர் இருக்கின்றனர்.  நேபாள மக்கள்  10,000 பேருக்கு மேல் இருக்கிறார்களாம்.   இவர்கள் யாவரும் திபெத்திலிருந்து அகதிகளாக வெளியேறி, இந்தயாவில், 1961 வாக்கில்,   அடைக்கலம் பெற்றவர்கள்.

இந்த விஹார் அமைந்துள்ள இடத்தின் பெயர் "பைலகுப்பே". என்ன,  ஊரின் பெயரே 'கடுமுடுக்' என இருக்கிறதா?   பக்கத்தில் இருக்கும் பெரிய ஊர் குஷால் நகர்.    

இங்குள்ளவர்களின் பெயர்களும் அவர்களின் வரலாறும் என்ன? எப்படி இந்த இடத்தை தேர்ந்தெடுத்தீர்கள் ? இவ்வளவு பிக்குகள் சாப்பிடுவதற்கு வருமானம் என்ன? வேலை ஏதும் செய்கிறீகளா?  அரசு எந்த வகையில் ஆதரவு கொடுக்கிறது? நீங்கள் கொண்டாடும் "த்ருப்வாங் பத்மா நோர்பு ரின்போச்சே" என்பவர் யார்?  இந்த கட்டிடத்தை "ZangDog Palr" என்கிறீர்களே அதன் பொருள் என்ன?  வாசலில் "நம்ற்றோலிங்க் மோனார்ச்சி" என போட்டிருக்கிறீகளே ? அது என்ன?,  என ஒரு பிக்குவைப் பார்த்து வினவப்போய், அவர் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டு, என்னை தரதர வென இழுத்துப்போய், ஒரு நீலக்கலரில் ஒரு புத்தகத்தைப் கொடுத்துவிட்டு ( நூறு ரூபாய் வாங்கிக் கொண்டுதான்) படித்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு அகன்றுவிட்டார். புத்தகத்தில்  உள்ள பெயர்களைப் படித்தாலே பற்கள் சுளுக்கிக் கொள்ளும் போலிருக்கிறது. ஒன்றும் புரியவில்லை. மேலே சொன்ன பெயர்கள் நினைவில் கொள்ளும்படியாகவா இருக்கிறது?   நிதானமாக பலமுறை படித்துப் பார்க்கணும். ஒரு டுரிஸ்ட் என்ற வைகையில் நான் சொன்ன தகவால் போதுமானது. 

இங்கே உள்ள கல்லூரியில் புத்தமதத் தத்துவங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.  Most notable among them are the large educational monastic institution Sera, the smaller Tashilunpo monastery (both in the Gelukpa tradition) and Namdroling monastery (in the Nyingma tradition). The spectacular Golden Temple which is also a major tourist spot in the area.

 உள்ளே  நுழைந்தாலே, ஏதோ வேறு ஒரு நாட்டிற்குள் நுழைந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. இந்த இடத்தின் முக்கியமான  அட்ராக்ஷனே தங்கக் கோயில்தான்.    புத்தர் சிலைகள் இருக்கின்ற்ன. பத்ம சம்பவா, புத்தர் மற்றும் அமிடயாஸ் அவர்களின் உயர உயராமான  சிலைகள் இருக்கின்றன.  யாவும் அறுபது அடி உயரம் கொண்டவை. சுவர்கள் யாவற்றிலும் நுணுக்கமான ஓவியங்கள். வண்ணமயமான புத்தர்கள், தேவதைகள், அரக்கர்கள் என அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.  ஒரு நாள் முழுவதும் இருந்தால்தான் ரசிக்க  முடியும் .  சுவர்களிலும்   தூண்களிலும்  கூட புத்த தத்துவங்கள் , 
ஓவியங்களாக விவரிக்கப் பட்டுள்ளன.


 மிக அமைதியான, கம்பீரமான மிகப்பெரிய அரங்கங்களைக் கொண்ட  இடம்.  கோயிலைச் சுற்றிலும் பசுமையான தோட்டங்கள் அமைத்துள்ளனர்.  என்ன? நம்மவர்கள் கோயிலின் அமைதியைக் கெடுத்து போடும் கூச்சல் எரிச்சலூட்டுகிறது. 


விஹாரின் உள்ளே புகைப்படம் தாராளமாக எடுக்கலாம். நுழைவுக் கட்டணமோ புகைப்படம் எடுக்க கட்டணமோ இல்லை.  Sera Je Monastery -கள் தங்களது கலாச்சாரத்தை முழுமையாக இங்கே காப்பாற்றி வருகின்றனர். திபெத்தில் உள்ள சாரா பல்கலைக்கழகத்தின் ரிப்ளிகாவாக இங்கே கல்லூரி அமைத்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டவர்கள் பயிலுகின்றனர்.  கோயிலில் அவர்களது பூஜைப்பொருட்கள், புத்தகங்கள் ,கைவினைப் பொருட்கள், நகைகள், வர்த்திகள் , புக்லெட்டுகள்  ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திருக் கின்றனர். மடிக்கரா டூரில் 'எனக்கு '  மிகப்பிடித்த மான இடம் இது.  இனி புகைபடங்கள் .

வெளித்தோற்றம்/

மெயின் கோவில் 


புத்தர் சிலை 60 அடி உயரம் - முன்புறம் பிக்குகளின் வழிபாட்டு இடம். 

கூறையில் அலங்காரம் 


மாறும் ஒரு கோவில் 

நுழைவு வாயில் 



சுவேரெங்கும் ஓவியங்கள் 


தூண்களில் கூட அலங்காரம் 


'சைடு' தோற்றம்.



ஹி ..ஹி ..

பிக்குகள் 



No comments:

Post a Comment