Saturday, November 28, 2015

சார்பின்மை

சகோதரி @Deepika Govind அவர்களின் ஆங்கிலப் பதிவு,
தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

மிக மிக நேர்த்தியான சிந்தனை.
ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் படிக்க வேண்டியது.

----------------
நான் குழப்பத்தில் இருக்கிறேன்..

ஆம். ஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்..

நான் நடுநிலையாளனாக இருக்க விரும்புகிறேன்..

அதனால் இந்த குழப்பம் எனக்கு.
நான் ஒரு ஹிந்துவாக பிறந்தேன்.. கிறிஸ்தவ பள்ளியில் படிக்கச் சென்றேன்.. வீட்டில் தீபாவளி கொண்டாடினேன்.. அதே உற்சாகத்தோடு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடினேன்.. சில நேரம் கிறிஸ்தவ சர்ச்க்கு சென்றேன். அங்கே பைபிள் வாசகங்கள் கேட்டேன்..

ஆனால், என்றும் என் மதம் அது இருக்கும் முறையில் இருந்து விலகும் என்ற பயம் இல்லாமல்....இப்போது ஒரு விஷயம் சிந்தித்தால் வியப்பாக இருக்கிறது...

இப்போது இருக்கும் மீடியா மற்றும் அறிவாளிகள் ( என்று கூறிக்கொள்ளும் கூட்டம்!) சிந்தனை எப்படி இருக்கும் என்று?

ஒரு கிறிஸ்தவ மக்கள் நிறைந்த இடத்தில ஒரு ஹிந்து பள்ளி கூடத்தில் இதே போல் கீதை மற்றும் மகாபாரதம் படித்தால் இவர்கள் சிந்தனை எப்படி இருக்கும்? இதற்கு எப்படி இவர்கள் பதில் தருவார்கள்?
நிச்சயம் இவர்கள், கூச்சல் இடுவார்கள்... அது மட்டும் உறுதி!

என் 14 வருட பள்ளி படிப்பில்,
என்னை மதம் மாற்ற முயற்சி நடந்தது இல்லை... நான் இன்னமும் ஹிந்து.
நான் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில் எனக்கு மேலும் ஒரு சந்தோசம் இருக்கிறது....

ஒரு ஹிந்துவாக என்னால், 33 கோடி கடவுள்/ விக்ரகங்கள் வணங்க முடியும்.. இதில் மேலும் சில கடவுள்களை சேர்த்தால்,
அதையும் என்னால், வணங்க முடியும்..
இதில் எனக்கு கவலை இல்லை...
ஒரு ஹிந்துவாக என்னால், இதை உள்வாங்கிக்கொள்ள முடியும்..
இதை கண்டு பயம் இல்லை..

ஆனால், ஒரு விஷயம் - ஒரு கிறிஸ்தவரோ அல்லது இஸ்லாமியரோ ஹிந்து கோவிலில் கொடுக்க படும் பிரசாதத்தை ஏற்றுக்கொள்வது இல்லை...

எத்தனை கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் கோவில் சென்று இருகிறார்கள்..?? வைஷ்ணவ தேவி கோவில்? திருப்பதி கோவில்??
இப்போது ஹிந்துக்களைப்
பார்த்து கேட்கிறேன்..

எத்தனை ஹிந்துக்கள் அஜ்மீர் தர்கா மற்றும் தேவா ஷரிப் அல்லது கிறிஸ்தவ தேவாலயங்கள் சென்று இருகிறார்கள்? ஏன்?

மதசார்பின்மை ஹிந்துக்களுக்கு மட்டுமா??

அல்லது இதை பேணுவது ஹிந்துக்களுக்கு விதிக்க பட்ட விஷயமா?
வேறு மத மக்களுக்கு இல்லையா??

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றால்
ஏன் என் வரிப்பணம் ஹஜ் யாத்திரைக்கு இனாமாக போக வேண்டும்? இது ஒரு மதத்துக்கு செய்யும் பாரபட்சமாக தெரியவில்லையா?

இது ஒரு சாரசரியான ஹிந்துவாகிய எனக்கு எழும் இயல்பான கேள்வி..

இன்னமும் குழப்பத்தில் நான்..! இது செய்தால், என் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் சந்தோஷப்படுவார்கள் என்றால் எனக்கு கொடுப்பதில் எந்த வருத்தமும் இல்லை... அவர்களுக்கு ஈத்-முபாரக் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை... இதில் எனக்கு எந்த பயமும் இல்லை..
ஏன் என்றால், நான் ஒரு ஹிந்து!

ஆனால் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்.. இதை எல்லாம் அந்த அறிவாளிகள்/மீடியா கண்டு கொள்ளவே இல்லை...

இந்த கோபத்தில் மற்றும் சமமின்மையில் அவர்கள் விருதை திருப்பி கொடுக்கவில்லை!

டெல்லி செயின்ட் ஸ்டிபான் கல்லூரியில் கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்த பொழுது கண்டு கொள்ளவில்லை?

மேலும் சில நிறுவனங்கள் கிறிஸ்தவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்போம் என்று சொன்ன பொழுது அதை பற்றி பேசவில்லை?!

இதே ஹிந்துக்கள் வாழும் இந்தியாவில் தான் அவர்களும் வாழுகிறார்கள்.. இந்த வேலைகளை செய்கிறார்கள்..

அப்போது எல்லாம் டிபாங்கர் பானர்ஜி எல்லாம் ஏன் இதை எல்லாம் தட்டி கேட்கவில்லை??

இப்போது நான் வசிக்கும் நாடு - தன்னை கிறிஸ்தவ நாடு என்று பறைசாற்றிக் கொண்ட நாடு.
எனவே மீடியா இங்கே நங்கூரம் இட்டு அமரவில்லை!

பிரிட்டன் அரசு செயின்ட் பால் தேவாலயத்தின் அருகில் மசூதி கட்ட அனுமதி தரவில்லை. ஆனால் எந்த கூச்சல் குழப்பம் இல்லை. அந்த நாடும் ஜனநாயக நாடு தான்.  BBC - இதை பற்றி ஒரு டாக்குமெண்டரி எடுக்கலாமே! ஏன் எடுக்க வில்லை?
அங்கே இஸ்லாமியருக்கு சம உரிமை இல்லையே? இதை பற்றி எல்லாம் பாரக் ஒபாமா வகுப்பு எடுக்கலாமே பிரிட்டிஷ் அரசுக்கு?

நான் என் மதத்தை அங்கே பெரிதாக்க விரும்பவில்லை. இன்னமும் நான் தான் சிறந்தவன், என் மதம் சிறந்தது என்று சிந்திக்கவில்லை.

எல்லோரும் சமமாக வாழவேண்டும் என்று நினைக்கிறேன்.. ஏன் என்றால் ' நான் ஒரு ஹிந்து'

நாளை, ஒரு வேளை, என் மகன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணக்க விரும்பினால், அந்த பெண்ணை மதம் மாற சொல்லி கேட்க மாட்டேன்.
வற்புறுத்த மாட்டேன். எனக்கு அந்த எண்ணமும் இல்லை. ஆனால், என் மகன் அந்த பெண்ணை மணக்க வேண்டும் என்றால் மதம் மாறி ஆகவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டால், நிலை என்ன?

இது திணிக்க பட்ட மத மாற்றம் இல்லையா? இதை குறையுள்ள மத சார்பின்மை என்று சொல்லலாமா? ( blurred version of secularism,created by pseudo –intellectuals !!)
என்னிடம் திருப்பி கொடுக்க எந்த அவார்டும் இல்லை!. என்னிடம் இதை டாக்குமெண்டரியாக எடுக்க வசதி இல்லை!.

ஒரு விவாதமாக்க என்னிடம் ஒரு டிவி இல்லை!.

ஆனால், என் இறைவன் என்னை இதையெல்லாம் ஏற்று கொள்ளும் பக்குவம் கொடுத்து இருக்கிறார். மதிக்கும் பக்குவம் கொடுத்து இருக்கிறார்.

ஒரு ஹிந்துவாக இதை எல்லாம் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம் எனக்கு.

இதைத்தான் மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொள்ளவேண்டுமா?
நான் ஒரு ஆண். ஹிந்து ஆண்.

என் மகனுக்கு இதையே கற்று கொடுக்க விரும்புகிறேன்.

அவனுக்கு சொல்ல விழைவது எல்லாம் இது தான்...

ஒரு தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும் என்றால், தலை தாழ்த்தி அதை செய் என்று...

ஒரு மசூதியில் செல்ல நேர்ந்தால் அதற்கான பரிபாலங்களை செய்.
ஒரு குருத்வாராவில் சேவை செய்ய நேர்ந்தால் செய்... மறுக்காதே..
இதை செய்வதால், நீ ஹிந்துவாகவே இருப்பாய்.. ஹிந்துத்தன்மையை விட்டு விலகமாட்டாய் என்று தான் அவனுக்கு படிப்பிக்க விரும்புகிறேன்...

நீ ஒரு ஹிந்துவாக ( உண்மை ஹிந்துவாக) இருந்தால் என்றும் நீ ஹிந்துவாக இருப்பாய்.

உனக்கு இதை எல்லாம் கண்டு பயம் இருக்காது..

இதை எல்லாம் கண்டால் குழப்பம் இருக்கும் ஆனால், பயம் இருக்காது.

நான் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டேன்.

ஆனால் அதை தடை செய்வதை ஆதரிக்க மாட்டேன்.
இதை வைத்து என் மதத்தை பழிக்காதே.

BEEF-PARTY கொண்டாடி என் மதத்தை பழிக்க நினைக்காதே..

இந்த குறைந்த பட்ச புரிதலாவது மாற்று மதத்தினருக்கு வேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன்.

அறிவாளிகளே.. நீங்கள் உங்கள் அவார்டை திருப்பி கொடுக்க விழைந்தால் நீங்கள் துணிவுடன் சொல்லுங்கள்...

ஹஜ் மானியம் நிறுத்தப்பட வேண்டும்...

இறைச்சி தடை நீக்க வேண்டும்...

பலதார திருமணம் இஸ்லாத்தில் இருந்து நீக்க படவேண்டும் அப்படி செய்யும் இஸ்லாமியர் ஏற்று கொள்ளப்படமாட்டார்.

.. எந்த சிறுபான்மையினர்க்கும்
கல்வி நிறுவனங்களில் சிறப்பு முன்னுரிமை தர வேண்டாம்... தலாக் என்று மூன்று முறை சொல்லி விவாகரத்து வேண்டாம்..

மாற்று மத திருமணங்களுக்கு மத மாற்றம் அவசியம் இல்லை..

கட்டாயம் இல்லை.. என்று சொல்ல முடிந்தால் சொல்லி விட்டு உங்கள் விருதுகளை திருப்பி கொடுங்கள்....!

நண்பர் திரு ஆனந்தன் அமிர்தன்
அவர்களின் பதிவில் இருந்து பகிரப்பட்டது.....

1 comment:

  1. மிகத் தெளிவான கருத்து. சிந்திக்க வேண்டிய பதிவு. அரசியல்வாதிகள் முதல் அறிவாளிகள் வரை இந்துக்களின் சகிப்புத்தன்மையை பெருமை படுத்துவதே இல்லை. அதை அழகாக சொல்லியிருக்கிறார், தீபிகா கோவிந்த். எனது முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.
    அருமையான பதிவை பகிர்ந்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete