Thursday, January 28, 2016

சிவாய நம

 சிவாயநம

பரம்பொருள் ( சிவபெருமான்)  வீற்றிருக்கும் சிவத் தலங்கள் பற்றிப் பார்ப்போம்

 சிவபெருமானை மூல முதல்வராக ( தலைவனாக)  கொண்டு அமைந்துள்ள கோயில்கள் சிவத்தலங்கள் என்று அழைக்கப் படுகின்றன

 இத்தலங்கள் சிவப்பதிகள் என்றும், சிவன் கோயில்கள் என்றும் சிவாலயங்கள் என்றும் அறியப் படுகின்றன

இந்தியா, இலங்கை,
நேபாளம், கம்போடியா, தமிழ்நாடு என உலக நாடுகள் பலவற்றில் சிவத்தலங்கள் உள்ளன

 அவற்றில் அதிக சிவத்தலங்களை கொண்ட நாடாக தமிழ்நாடு அமைந்துள்ளது

அவை எண்ணிக்கை அடிப்படையில்

முப்பீட தலங்கள்,

பஞ்சபூதத் தலங்கள்,

 பஞ்ச கேதார தலங்கள்,

பஞ்ச தாண்டவ தலங்கள்,

பஞ்ச மன்ற தலங்கள்,

பஞ்ச பீட தலங்கள்,

பஞ்ச குரோச தலங்கள்,

பஞ்ச ஆசன தலங்கள்,

 பஞ்ச லிங்க தலங்கள்,

 ஆறு ஆதார தலங்கள்,

 சப்த விடங்க தலங்கள்,

அட்டவீரட்டானத் தலங்கள்,

நவலிங்கபுரம்,

 நவ கைலாயங்கள்,

நவ சமுத்திர தலங்கள்,

தச வீராட்டன தலங்கள்
எனவும், கூறப்படுகின்றனவாகும்

சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு

தேவாரத் திருத்தலங்கள்,

திருவாசகத் திருத்தலங்கள்,

 தேவார வைப்புத் தலங்கள்,

திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள்,

திருவிசைப்பாத் திருத்தலங்கள்

 எனவும், கூறப்படுகின்றவனவாகும்

வன விசேச தலங்கள்,

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்,

சோதிர்லிங்க தலங்கள்,

ஆதி கைலாய தலங்கள்

எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களின் பட்டியல்,

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களின் பட்டியல்,

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்,

 தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்,

தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்,

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்
எனவும் வகைப்படுத்தப் பட்டுள்ளது.

எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டவை சிலவற்றின் விவரம் பற்றிப் பார்ப்போம்

அட்ட  ( எட்டு) மூர்த்தங்கள்

நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக சிவபெருமான் இருக்கிறார்.
அதனால் அவர் அட்டமூர்த்தி என்று அழைக்கிறார்கள்.

 அவ்வாறான எண் பொருளாக சிவபெருமான் இருக்கும் தலங்கள் அட்ட மூர்த்தர்கள் என்று அழைக்கப் பெறுகின்றன.

நிலம் - திருவாரூர் ,காஞ்சிபுரம்

நீர் - திருவானைக்கா

தீ - திருவண்ணாமலை

காற்று - திருக்காளத்தி

ஆகாயம் - சிதம்பரம்

சூரியன் - திருச்சிராப்பள்ளி

சந்திரன் - மதுரை

ஆன்மா - திருப்பெருந்துறை

பஞ்சபூத சிவத்தலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

மண் (பிருத்திவித்தலம்) -காஞ்சிபுரம்,

திருவாரூர், (திரு + ஆர் + ஊர் ; ஆர் = மண்)

நீர் (அப்புத்தலம்) -திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்,
திருச்சிராப்பள்ளி

தீ (தேயுத்தலம்) -திருவண்ணாமலை

வளி (வாயுத்தலம்)-திருக்காளத்தி

வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்

பஞ்ச லிங்க தலங்கள்

அர்கேசுவரர் லிங்கத்தலம்

பாதாளேசுவரர் லிங்கத்தலம்

மரனேசுவரர் லிங்கத்தலம்

மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம்

வைத்திய நாதேசுவரர் லிங்கத்தலம்

ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இவைதான்.

தில்லை (சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம்.

திருவாரூர்-அசபா தாண்டவம்.

மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.

அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.

திருமுருகன்பூண்டி-பிரம தாண்டவம்.

ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து ( ஞானக்கூத்து)  இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம். அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள் (அடைப்புக் குறிக்குள் சபைகள்)

தில்லை (சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை).

திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).

மதுரை-வெள்ளி மன்றம் (இராஜத சபை).

திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).

திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

பாண்டி நாட்டு பஞ்சபூத ஸ்தலங்கள்

சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் ,சங்கரன்கோவில் - நிலம்

கரிவலம்வந்த நல்லூர் - நெருப்பு

தேவதானம் - ஆகாயம்

தாருகாபுரம் - நீர்

தென்மலை - காற்று

சப்த விடங்க சிவத்தலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.
அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.

திருவாரூர் வீதிவிடங்கர் அசபா நடனம்

திருநள்ளாறு நகரவிடங்கர் உன்மத்த நடனமம்

திருநாகைக் காரோணம் என்கிற நாகபட்டினம்
சுந்தரவிடங்கர்
வீசி நடனம்

திருக்காறாயில்
என்கிற திருக்காரைவாசல்ஆதிவிடங்கர்
குக்குட நடனம்

திருக்கோளிலி
 என்கிற திருக்குவளை அவனிவிடங்கர் பிருங்க நடனம்

திருவாய்மூர்
நீல விடங்கர்
கமல நடனம்

திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்
புவனி விடங்கர் கம்சபாத நடனம்

அட்ட வீரட்டானக் கோயில்

சிவபெருமானின் வீரம் குறித்த பெருமைகளைக் குறிப்பிடும் எட்டு கோயில்கள் அட்டவீரட்டானக் கோயில்கள் எனப்படுகின்றன. அவை

திருக்கண்டியூர் பிரம சிரக்கண்டீசுவரர் கோயில் -பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது

திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் - அந்தகாசூரனைச் சம்காரம் செய்தது

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில், கடலூர் - திரிபுரத்தை எரித்தது

கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில், திருப்பறியலூர் - தக்கன் சிரம் கொய்தது

வழுவூர் வீரட்டானேசுவரர் கோயில், வழுவூர் - யானையை தோல் உரித்தது

திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில், திருவிற்குடி -சலந்தாசுரனைச்
சம்காரம் செய்தது.

கொருக்கை வீரட்டேசுவரர் கோயில், திருக்குறுக்கை -காமனை எரித்தது.

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில், திருக்கடவூர் - எமனை உதைத்தது.

பஞ்ச கேதரங்கள்


இமயமலைச் சாரலில் அமைந்துள்ள கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்மஹேஷ்வர் மற்றும் கபிலேஷ்வர் முதலிய இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள் தோன்றியதாக  நம்புகிறார்கள். இதனால் சிவபெருமானை கேதரநாதன் என்றும் அழைக்கின்றார்கள்
அவை

கேதார்நாத் - உடல்

துங்கநாத் - புஜம்

ருத்ரநாத் - முகம்

மத்மஹேஷ்வர் - தொப்புள்

கபிலேஷ்வர் - தலைமுடி

தமிழகத்தின் நவ கைலாயங்கள்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும்
தூத்துக்குடி மாவட்டத்திலும்
தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கபடுகின்றன அவை

பாபநாசம்

சேரன்மகாதேவி

கொடகநல்லூர்

முறப்பநாடு

திருவைகுண்டம்

தென்திருப்பேரை

 செப்பறை

சேர்ந்த பூ

மங்களம்

முதலானவை நவ கயிலாயங்கள் ஆகும்

 தேவாரத் திருத்தலங்கள்

இந்தியாவில் பல சிவத்தலங்கள் இருப்பினும், தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் ( 274)  இருநூற்று எழுபத்து நான்காகும். இவைகளில் இருநூற்று அறுபத்து நான்கு (264) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்

திருவாரூர்
பிறக்க முக்தி தருவது

சிதம்பரம்
தரிசிக்க முக்தி தருவது

திருவண்ணாமலைநினைக்க முக்தி தருவது

காசி இறக்க முக்தி தருவது


பாரதம் முழுதும் இவ்வாறாக பல்வேறு சிவத்தலங்கள் உள்ளன இவைகளை நாம் தரிசனம் செய்து மீண்டும் பிறப்பில்லாமல் சிவபெருமானின் திருவடிக்கீழ் பேரானந்தமாக இருக்க முயற்சி செய்து வாழ்வோம்

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment