Sunday, March 4, 2018

ஸ்ரீதேவி

ஶீதேவிக்கு இரங்கற்பா பாடும் சமுதாயம், எல்லையில் உயிரிழக்கும் வீரர்களைப் பற்றிக் கவலைப் படிவதில்லை என்ற 'கவலையை' சமூக வலைத் தளங்களில் காண்கிறேன்.
எல்லா இறப்பும், ஶீதேவி உட்பட, இரங்கலுக் குரியதே! ஶீதேவியின் மறைவு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது இயல்பான ஒன்று!
இதையும் சோல்ஜர்ஸையும் ஒப்பிடுவது சரியா எனத் தோன்றவில்லை!
எனது கவலை வேறு!
ஒரு ஜவானின் உயிர் எளிதில் இழக்கக் கூடிய ஒன்றல்ல! ஒரு கேப்டனை உருவாக்க ஏகமாகச் செலவிடுகிறோம்! ஏராளமான உழைப்பு, பயிற்சி, அனுபவம், தியாகம் எல்லாம் பின்னால் இருக்கிறது!
எல்லையில் ஒரு வீரனை இழக்கிறோம் என்றால், அதற்கு விலையாக எதிரி ஏகப்பட்ட உயிர்களைக் கொடுத்திருக்க வேண்டும்! ஒரு அமெரிக்க, ருஷ்ய வீரரின் உயிரை எளிதாக எடுத்துவிட முடியாது; எந்த வகையான கடினச் சூழலிலும்!
ஆனால் இங்கே நிலைமை வேறு வகையாக இருக்கிறது! அடிக்கடி, நம் வீரர்கள் எல்லையில் உயிரை விடுகிறார்கள். அந்தத் தியாகத்திற்கு மரியாதை செலுத்து கிறோம்; இரங்கல் தெரிவிக்கிறோம் என்பது வேறு விஷயம்.
அதெப்படி இந்திய வீரர்களை just like that கொல்ல முடிகிறது?
நமது மேஜர்கள் இதுகுறித்து சிந்திப்பார்கள், strategy யை மாற்றியமைப்பார்கள் என நம்புவோம்....

No comments:

Post a Comment