Monday, August 15, 2011

சுதந்திர தின உரைகள்:

தொலைக்காட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலை வரும், பிரதமரும் ஆற்றியஉரைகளில் ஊழல் குறித்து கருத்துரைத் துள்ளனார்:

குடியரசுத்லைவர்:

நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை முறையை ஊழல் இன்று ஒரு புற்றுநோயைப்போல் பாதித்து வருகிறது. இதை உடனடியாக ஒழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசு, பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.

ஒரே மருந்தில் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியாது என்பது போல், ஒரே வழிமுறையில் ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலுக்கு எதிராக தடுப்பு, தண்டனை, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை போன்ற பல்வேறு நிலைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர்:

நாட்டில் வறுமையை ஒழிக்க அரும்பாடுபட்டு(?) வருகிறோம். ஊழல், நாட்டின் வளர்சிப்பாதைக்கு தடையாக உள்ளது. ஊழலுக்கு எதிரானவர்கள் மீது இந்த அரசு சட்டப்பூர்வ நடவடிக்கையை துரிதமாக எடுத்து வருகிறது. பலமான லோக்பால் மசோதாவை உருவாக்க அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. ஊழலை ஒழிக்க இந்த மசோதா பயன் தரும். உண்ணாவிரதமோ , போராட்டமோ வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க முடியாது. பார்லி.,யில் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். 


குடிமகன் கேட்கிறான்:

நடந்த ஊழல்களுக்கு (2ஜி ஒரு உதாரணமே) யாரை பொறுப்பேற்க வைக்கலாம்?  எதுவும் எனக்குத் தெரியாது என்று பம்மும் பிரதமரையா?  நம்மை யாரும் கேட்பதற்கு உலகில் எவனும் இல்லை எனச் செயல்பட்ட ஊழல் அமைச்சரையா? உங்களையெல்லாம், அரசில் பங்கேற்காமலேயே, ரிமோட் கண்ட்ரோலில் கட்டுக்குள் வைத்திருக்கும் கட்சித் தலைவரையா?  யார்தான் பொறுப்பேற்கப் போகிறீர்கள்?

நடந்தவை எல்லாம் பிரதமருக்கு தெரிந்து தான் நடந்தது என விடாமல் குற்றஞ்சாட்டுகின்றாரே?  உங்களது பதில் என்ன?

ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், ஊழல் பேர்வழிகள் என்ன, பாகிஸ்த்தான் இல்லை சீனாவிலிருந்தா வந்துள்ளனர்? இந்த தேசத்தை (சில ஆண்டுகள் நீங்கலாக) சுதந்திரம் அடைந்தது முதல், ஆண்டு வருபவர்கள் நீங்கள் தானே? அப்படியானால் மக்கள் யாரை எதிர்த்து போராட வேண்டும்?  அரசு இயந்திரம் உங்கள் கட்டுப் பாட்டில் இருக்கிறதா இல்லை நீங்கள் அதன் கைப்பாவாயா?

காந்தியின் அஹிம்சை வழியினை நினைவுகூறும் நீங்கள், அதே அஹிம்சைவழியில் போராடும் 'ஹசாரே' வுக்கு நீங்கள் காட்டும் இடம் என்ன? திகாரா?

ஹசாரேவினால் மட்டும் ஊழலை நீக்கிவிட முடியும் என எவரும் நம்பவில்லை.  'லோக்பால்'  ஒரு சின்ன ஆரம்பம். மக்களிடையே ஒரு விழிப்புணர்வு.  உங்களுக்கெல்லாம் ஒரு சின்ன பயம் வரக்கூடும். அவ்வளவுதான்.

ஆனால் 'லோக்பால் சட்டத்தின்' பார்வைக்குள்ளேயே நீதித் துறையி னையும், பிரதமரையும் கொணர மாட்டேன் என அடம் பிடிப்பதின் உட்-பொருள் என்ன?  அவ்வாறு செய்வதில் உங்களுக்கு, என்ன பிரச்சினை? அப்படி செய்தால் பிரதமரின் பதவிக்கு மரியாதை இழப்பு எனில், அதற்கு மாற்று ஏற்பாடுகள் என்ன?  

பிரதமர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும் என்ற 'Moral' உங்களுக்கு இல்லாவே இல்லையா?  

நாட்டின் ஊழல் மட்டுமல்ல, அனைத்து பிரச்கினக்களுக்குமான ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது எனவும், அதற்கான விடைகள் என்னவென்றும் உங்களுக்கும் தெரியும், நாட்டு மக்களுக்கும் தெரியும்.  

ஆனாலும் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்று "ஃபார்மலாக",   "நலம் - நலமறிய நாட்டம்" என்று ஒரு உரையை எழுதி வைத்துக் கொண்டு, கண்ணாடிக் கூண்டுக்குள், பத்திரமாக இருந்து கொண்டு படியுங்கள்.  நாங்களும் "இ.வா" மாதிரி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

மக்கள், நமது அமைப்புகளின் (பாராளுமன்றம், அரசு, நீதித்துறை) மீதும் , ஜனநாயகத்தின் மீதும், மெல்ல மெல்ல நம்பிக்கை இழந்து கொண்டுள்ளனர் .  கவணிக்கிறீர்களா?  பிகாரிலும் ஒரிசாவிலும் நடப்பது பற்றி ஊளவுத்துறையினர் ஏதாவது சொல்கின்றனரா? அது உங்கள் காதுகளில் விழுந்ததா? 

மக்கள் 
அரசாங்கங்கள் மீது நம்பிக்கையிழ்ந்து விட்டால், 
அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதாவது புரிகிறதா?


No comments:

Post a Comment