Saturday, October 15, 2011

புரட்சி 2020 – சேதன் பகத்


மற்றும் ஒரு ஆங்கில நாவல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
இளம் இந்திய-ஆங்கில எழுத்தாளர்களில் விரும்பிப் படிக்கப்படுபவர்களில் ஒருவர் “சேதன் பகத்” இவர் தனது ஐந்தாவது நாவலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். பெயர்:  ‘ரெவொல்யூஷன் 2020’.

கதைமாந்தர்களில் முக்கியமானவர்கள் மூவர். கோபால், ராகவ் மற்றும் ஆர்த்தி.  

இவர்களில் கோபால் கேரக்டர் மூலமாகவே கதை சொல்லப்பட்டிருக் கிறது. மூவரும் பள்ளிப்பருவத்தி லிருந்தே நண்பர்கள்

இவர்களில் கோபால் கீழ்-நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர். ராகவ் உயர்- மத்தியதர வர்க்கம். ஆர்த்தி அதிகார/ அரசியல் பின்புலத்திலிருந்து.

கோபாலும், ராகவும் JEE / AIEEE தேர்வில் போட்டியிடுகின்றனர். ராகவ் தேர்ச்சிபெற கோபால் தோல்வி யடைகிறார். இவர்கள் இருவரும் ஆர்த்தியை காதலிக்கின்றனர்.

இந்த ஸ்ரீதர் காலத்திய முக்கோனக் காதல் கதையை, அரசியல் கலந்து, சூடான ‘மசால் வடையாகத்’ தருகிறார் சேதன் பகத்.  கோபால் பணம் சம்பாதிப்பதை குறியாகக் கொள்ள, ராகவ் சினிமா கதாநாயகன் போல உலகைத் திருத்த உத்தேசிக்கிறார்.

“சேதன் பகத்” என்ன சொல்ல வருகிறார் என்பது குழப்பம் தான். வாழ்க்கையில் வெற்றிபெற ஊழலைத் துணையாகக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார், கோபால் மூலம்.

இந்திய மத்திதர வர்க்கம், அன்னா ஹசாரே பின்னால் நிற்பது போல, ராகவ் ஊழலை எதிர்க்கிறார். அதே மேலெழுந்த வாரியான பார்வை. ஊழலின் அஸ்த்திவாரம் எது, ஆதாரம் எது என்பதை கோடிகூட காண்பிக்க வில்லை. கேரக்டரிலும் ஆழம் இல்லை.

வெற்றிபெறும் மனிதருக்குப் பின்னால் போகும் பெண்ணாக ஆர்த்தி’. 

கதையில் சினிமாத்தனம் தூக்கலாக இருக்கிறது.  கடைசி அத்தியாயங்கள் அவசர அவசரமாக முடித்தாற் போல உள்ளது.  இவருடைய புத்தகங்களில் வரும் புத்திசாலித்தனமான வாதங்களோ, யதார்த்தமான நகர-உயர் மத்தியதர சூழ்நிலை வர்ணணைகளும் மிஸ்ஸிங். 

பெரும்பகுதியான இடங்களில் அடுத்த என்ன வரப் போகிறது என்பது யூகிக்கும்படியாகவே உள்ளது. இந்த முக்கோணக் காதலில், யார் சரி-யார் தவறு என்பதில் ஆசிரியருகே குழப்பமா அல்லது நீங்களே தீர்மாணித்துக் கொள்ளுங்கள் என விட்டுவிடுகிறாரா தெரியவில்லை!  கதையில் கேரக்டர்களை டெவலப் செய்வதில், இன்னும்  கொஞ்சம் கவணம் கொண்டிருக்கலாம்.

மும்பை சினிமாவை மனதிற்கொண்டு எழுதப் பட்டாற்போல இருக்கிறது.
நீங்கள் சேதனின் விசிறியாக இருந்தால், இதற்கு முன்னால் வெளியான நாவல்களை மனதிற்கொண்டு படிக்காதீர்கள். ஏமாற்றமடைவீர்கள்.
மற்றவர்களுக்கு, ஒரு நல்ல டைம் பாஸ் நாவல். படிக்கலாம்

No comments:

Post a Comment